முள்ளிவாய்க்கால்
துயிலும் இல்லத்திலிருந்து...

ஒரு புலி வீரனின் சீருடை
வீரத்தின் அடையாளமாய்
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது!!!

வலி கொண்ட இனத்தின்
விடிவிற்காக - வரிப்புலி சுமந்து
வீறுகொண்டெழுந்த வேங்கை ஒன்று
வீரப் போர் புரிந்து....
வீரமரணம் அடைந்த பின்பும்...
தனது உடல் விதையாகிப் போக...
தன் உடல் சுமந்த
வரிப் புலிச் சீருடையின்
ஒற்றைப் பகுதியை...
வீரத்தின் அடையாளமாய்
விட்டுச் சென்றுள்ளான்.!!

ஆறாண்டுகள் போன பின்பும்...
மங்கிப் போகாத பொலிவுடன்
யுத்தத்தின் காயங்களைச் சுமந்தவாறு
ஒரு புலி வீரனின் சீருடை
வீரத்தின் அடையாளமாய்
முள்ளிவாய்க்கால் மண்ணிலே
இன்றும் அமைதியாக...
உறங்கிக் கொண்டிருக்கிறது!!!

"விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை.!!
இலட்சிய வீரர்கள் இறப்பதுமில்லை!!!"

- வல்வை அகலினியன்
            (21.11.2015)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:
1, www.pathivu.com
2, www.tamilarul.com
3, www.vivasaayi.com
4, www.eelavidiyal.com
5,

மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் தோழர்களுக்கு ....
ஒரு அன்பான, அவசர வேண்டுகோள்..!

மாவீரர் தினத்தில்...
தாய் மண்ணின் விடிவிற்காகப் போராடிய மாவீரர்களை நெஞ்சினில் சுமந்து வீரவணக்கம் செலுத்தி நினைவு கொள்வதையும், மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்படுவதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அந்த வகையில், தாய்த் தமிழகமும் தமிழீழ விடுதலைக்காக தனது புதல்வர்களையும் ஈன்று கொடுத்து தனது பங்களிப்பையும் சிறப்பாகவே நிறைவேற்றியுள்ளது.

தாய்த் தமிழகம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஒவ்வொரு மாவீரர் தினத்தன்றும்...

தமிழக உறவுகள் அனைவரும் நெஞ்சினில் சுமந்து நினைவு கொண்டு வீரவணக்கத்தோடு கௌரவிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இனமான உணர்வுள்ள தமிழனதும் மிகுந்த எதிர்பார்ப்பாகும்...

அந்த வகையில், தாய்த் தமிழகம் வீரத்தோடு ஈன்று அனுப்பிய ஒரு சில மாவீரர்களில் பூநகரி "தவளைப் பாய்ச்சல்" இராணுவ நடவடிக்கையின் போது வீர காவியமான கரும்புலி "லெப்டினன்ட் செங்கண்ணன்" அவர்களும் அடங்குவார். அந்த உன்னதமான வீரம் நிறைந்த மாவீரனுக்கு தமிழகத்தில் இதுவரை எந்த நிகழ்வுமே நடந்ததில்லை.!! அத்தோடு எந்தவொரு அடையாளங்களும் பதிக்கப்படவில்லை என்பதே மிகவும் வேதனையான விடயமாகும்!!!

எதுவுமே செய்யாத, சாதிக்காத தன்னலம் கொண்ட அரசியல்வாதிகளை... அவர்கள் இறந்த பிற்பாடு ஒவ்வொரு வருடமும் தலையில் தூக்கி வைத்து கௌரவித்து... தெருவெங்கும் அவர்களுக்கு சிலைகள் வைத்து கொண்டாடும் போலித் தொண்டர்களை விட...

"நாம் தமிழர்" தொண்டர்கள் இனமானமுள்ளவர்கள் என்பதை ஈழத்தமிழருடன் உலகத் தமிழரும் நன்கு அறிவார்கள்.

ஆகவே, இந்த வருட மாவீரர் நாளில் தாய்த் தமிழகம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களையும் நினைவு கூர்ந்து, அவர்களது வீரப் பெற்றோர்களையும் இனம் கண்டு கௌரவித்து அவர்களுக்கான வீரம் செறிந்த நிகழ்வுகளை அவர்களுக்குரிய தகுந்த இடத்தில் நடாத்தி சிறப்பிக்குமாறு ஈழத்தமிழர் சார்பாக மிகவும் அன்போடு வேண்டிக் கொள்கின்றேன்.

மாவீரர் கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன் அவர்களின் இயற்பெயரும் முகவரியும்...

தனுஸ்கோடி செந்தூரபாண்டியன்,
சாத்தூர்,
சிவகாசி,
தமிழ்நாடு,
இந்தியா.

மேற்கண்ட முகவரியில்... தேடிச் சென்று செங்கண்ணன் அவர்களது பெற்றோரை இனம் கண்டு மற்றும் அவர்களது உறவினர்களையும் அழைத்து இந்த வருட மாவீரர் நாளை "நாம் தமிழர்" உறவுகள் மிகவும் சிறப்பாக தாய்த் தமிழகத்தில் நடாத்த வேண்டும் என்பதே இனமானமுள்ள அனைத்து தமிழரின் விருப்பமாகும்.

வீரத் தமிழ்மகன் செங்கண்ணன் பிறந்த மண்ணில் செங்கண்ணனுக்கு ஒரு துரும்பும் இல்லையா??? அந்தப் வீரப் புதல்வனுக்கு தாய் மண்ணில் எந்தவொரு உரிமையும் இல்லையா???

செங்கண்ணனை வணங்கி அவனது மண்ணில் ஒரு அடையாளத்தை விதைத்து நாம் தமிழராக எழுவோம்!!!!

- வல்வை அகலினியன்
              (20.11.2015)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:
1, விவசாயி இணையம்
2, www.tamilan24.com
3, ஈழவிடியல் இணையம்
4, www.indosri.com
5, www.tamilarul.com
தேவைகள் ஏற்படும் போது...
தேடினேன்...

உணர்வுகளால்...
தொட்டுவிடும் தூரத்தில்
இருந்து கொண்டும்....

வார்த்தைகளால்...
பதிவுகள் பல செய்தும்
எந் நேரத்திலும்
உலாவிக் கொண்டும்...

முகநூல்களில் வந்து போகும் சிலர்...

என் தேவைகளின்
நியாயங்களை அறிந்தும்..
என் தேடல்களின்
வலிகளை உணர்ந்தும்

என் தேவைகள்...
என் தேடல்கள்...
என்பவற்றைச் சிதைத்து
தொலை தூரத்தில் நின்று
வேடிக்கை பார்த்து...

நானாக...
தேடி வந்து வேதனைகளில்
அழுகின்ற போதெல்லாம்...
உறவுகளின் பெயரால்
பாசங்களை விதைத்து
ஆசைகளைக் காட்டி
உணர்வுகளை நசுக்கி
கொன்று புதைத்து விட்டு...

பின்பு...

தேவைகளே இல்லாமல்
நான் இருக்கும் போது...

மற்றவர்களின்
தேவைகள்... தேடல்களின்
வலிகள் உணர்ந்து...
ஆழம் உணர்ந்து...
அவசியம் உணர்ந்து...
அனைத்துத் தேவைகளையும்
பூர்த்தி செய்து
அனைத்து தேடல்களையும்
முழுமை பெறச் செய்து...
அனைவரையும் உணர்வு கொண்ட
புனிதமான உறவினால்
உயிராக்கும் பொழுதினில்...

இப்போது... என்னிடம் வந்து
என்ன தேவையென்றால்...

என் தேவையை எவ்வாறு சொல்வேன்.

தேடல்கள் ஊடாக தேடித் தேடி
கிடைக்காத ஒரு தேவையை...

தற்போது தேடல்களே
கொள்ளாத போது...

என்னைத் தேடி வந்து...
என் தேவைகள், என்னவென...
தேட முற்படுவது ஏன்???

அன்று தேவையில்லாத நான்...
இன்று தேவைப்படுவதாலா..?

அல்லது...
சுடப்பட்ட தங்கம் பிரகாசிப்பது போல்
துன்பப்பட்ட நான்
ஒளிவீசும் மெழுகாக எரிவதாலா??

- வல்வை அகலினியன்
           (15.11.2015)
தேசியக் கொடியோடு பயணிக்க வேண்டியவள்...
இன்று தனிமையோடு போகிறாள்!!!!

அடிமைப்பட்டுக் கிடந்த
தமிழர் தேசத்தில்
அடுப்பூதும் பெண்கள் கையிலும்...
ஆயுதம் ஏநத வைத்த
தலைவன் வழியில்...
அடிமை விலங்கினை
உடைத்தெறியவென
பூக்களும்....
போர்களம் போனவர்களில்
நீயும் ஒருத்தி..!

வலி சுமந்த
வீர மங்கையான நீ....
போர்க்களத்தில்....
வரி சுமந்த
புலியாகிப் புயலானாய்.!!
அரசியல் சாணக்கியத்திலும்
தென்றலாய்... பூவாய்...
உலா வந்தாய்..!!

இன்றோ...
நீ இறந்தநாள் என...
அனைத்துத் தமிழரும்
தமிழர் ஊடகங்களும்
கண்ணீர் அஞ்சலியோடு
அழுது தீர்க்கின்றனர்..!!!

ஆனாலும்.....
உனது சரித்திரம் அப்படியல்ல...

தலைவன் நிழலில்...
தலைவனின் பார்வையில்...
தளபதிகள் போராளிகளோடு
மக்கள் கடலில் சங்கமித்து
வானலைகளில்
விடுதலைக் கீதங்கள்
இசைக்கப்பட்டு...
தேசமெங்கும்
மஞ்சள் சிகப்புக் கொடிகள்
அலங்கரிக்க...
தோரணங்கள் தொங்க விடப்பட்ட
வீதிகளில் - தமிழீழ
தேசியக் கொடி போர்த்தப்பட்ட
உன் புனித
வித்துடல் பயணிக்க...

தெருவெல்லாம் காத்திருக்கும்
குழந்தைகள் முதல்
முதியவர்கள் வரை
தம் உறவொன்று
வீரமரணம் எய்தியதாக...
உன் புனித வித்துடலை
கண்ணீரோடு
மலர் மாலைகள் சாத்தி
வணங்கிக் கொள்ள...

தமிழீழ தாகத்தினைத் தாங்கி
தமிழர்களின்...
நினைவுகளைச் சுமந்து
"புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்" என
துயிலும் இல்லத்தில்
இராணுவ மரியாதையோடு
வீரச்சாவாய்....
விதைக்கப்பட்டிருக்க வேண்டிய
உன் புனித வித்துடல்,

இன்றோ....
சாதாரண சாவாய்...
எதுவமற்று
வெறும் சடங்குகளோடு
தீயினில் சங்கமித்து
வெறும் சாம்பலாகிப் போனதே.!!!

வீர வரலாறாக...
வீர வணக்கத்தோடு...
உயர் பதவி நிலையோடு...
கல்வெட்டுகளிலும்
சரித்திரப் பக்கங்களிலும்
பதிக்க வேண்டிய உன்னை...

இன்றோ....
சூனியத்தில் இருந்து
சாபங்களை வேண்டி
வெறும் கண்ணீர்
அஞ்சலிகளோடு
கோழைகளாக.....
கையாலாகாத நிலையில்
வெட்கித்து நின்று - வெறும்
அஞ்சலி மட்டுமே செய்து
கண்ணீரோடு கதறுகின்றோம்.!!!

வீரச்சாவாய்...
வீர வரலாறுகளுடன்
விதைக்கப்பட வேண்டிய
உன் புனித வித்துடல்...

இன்று...

தீயினில் சங்கமாகி
சாம்பலாகிப் போனாலும்...
தமிழர்களாகிய நாம்
நெஞ்சமெல்லாம் சுமந்து
உனக்கான கல்லறை அமைத்து
வீர வரலாறுகளாய்....
உன் வரலாற்றுப் பக்கங்களையும்
உன் நினைவுகளையும்
எழுதி... எழுதியே...
வீரவணக்கம் செலுத்துவோம்!!!!

- வல்வை அகலினியன்.
சில கேவலமான பிறவிகளால்... விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், விடுதலைப் புலிகளின் புனித சின்னத்திற்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது!!!


தற்போது, கேள்வி கேட்க யாருமே இல்லை என்றவுடன் பல ஈனப்பிறவிகள் சமூக வலைத்தளங்களில் தாம்தான் "விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம்" என்ற ரீதியில் அறிக்கைகள் விட்டு விடுதலைப் புலிகள் அமைப்பையும், விடுதலைப் புலிகள் சின்னத்தையும் கேவலப்படுத்தி வருகிறார்கள்.

சரி, அறிக்கைகள் விடுவது என்றாலும் நல்ல விடயங்களோடு கருத்துக்கள் பதிவு செய்து வெளியிடுவதென்பது சிறப்பே... ஆனாலும், உணர்வுள்ள உண்மைத் தமிழர்கள் எவரும் விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி போலி அறிக்கைகள் வெளியிட்டு மக்களைக் குழப்புவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அவ்வாறான போலி அறிக்கைகள் வெளியிடுபவர்களை "துரோகத்தின் எச்சங்களாகவே" தமிழர்கள் கருதுவார்கள்.

இங்கே நான் கீழே இணைத்திருக்கும் படத்தை அமல் என்பவரின் முகநூலில் இருந்து எடுத்தேன். அதில் விடுதலைப் புலிகளின் பெயரையும், சின்னத்தையும் சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி தமிழையும் கொலை செய்துள்ளனர்.


அதில் "சிறுமிகளையும்" என்பதற்கு "சிருமிகளையும்" என்றும்...

பலாத்காரம் என்பதற்கு "பலச்காரம்" என்றும்... தமிழ் மொழியை கொலை செய்துள்ளனர். போதாத குறைக்கு விடுதலைப்புலிகளின் பெயர் வேறு..!!

தமிழரின் வீரம் செறிந்த வரலாறுகளையும், விழுமியங்களையும், பெருமைகளையும் உலகறியச் செய்த விடுதலைப் புலிகளின் பெயரில் அநாகரீகமான நடைமுறையில் எழுத்துத் தவறுகளோடு இவ்வாறு அறிக்கைகள் வெளியிடுவதால்... அது உலகில் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் தலைகுனிய வைத்து கேவலப்படுத்தும் செயலாகும்!!

இவ்வாறான அறிவற்றத்தனமான அறிக்கைகள் விடுபவர்களை இனம் கண்டு அனைவரும் புறக்கணிக்க வேண்டும்... காரணம், இவர்களால் தமிழனத்திற்கே மிகப் பெரிய ஆபத்து உருவாகும் சூழல் உள்ளது!

தற்போது... முகநூல்களில் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால், உடனே அவருக்கு "துரோகிப்" பட்டம் கொடுத்து இவ்வாறான அறிக்கைகள் ஊடாக பதிவிட்டு விமர்சிப்பார்கள்.  போதாத குறைக்கு அவரது பதிவின் உண்மை நிலையை ஆராயாமல், ஆழமாக சிந்திக்காமலும், தூரநோக்கின்றியும் துரோகிப் பட்டம் கொடுக்கப்பட்டவருக்கு கேவலமான முறையில் பின்னூட்டம் பதிவு செய்வதற்கு ஒரு முட்டாள் கூட்டமும் கூடவே அலையும்.!!

தற்போது ஒரு கணணி... ஒரு கைபேசி... ஒரு முகநூல் கணக்கு இருந்தால் போதும் உடனே ஒருவருக்கு "துரோகிப் பட்டம்" கொடுக்க முடியும்!!

உண்மையிலேயே ஒருவர் துரோகம் செய்தால், அவர் செய்த துரோகத்தின் செயற்பாடுகளை ஆதாரபூர்வமாக வெளியிட்டு செய்திகளாக பதிவிட வேண்டும். அதுவும் நாட்டின் நலன்களுக்கு எதிராக செயற்படுபவர்களையே அனைவரும் பொதுவில் "தேசத் துரோகி" என்பார்கள். அதுவும், அவ்வாறானவர்களை ஒரு அரசாங்கம் அல்லது மக்களினால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புக்கள் போன்றவைகள்தான் ஆதாரங்களுடன் துரோகத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக வெளியிடுவார்கள்.

ஆனால், தற்போதோ இந்த முகநூல்களில் ஒருவரை ஒருவருக்கு தனிப்பட்ட ரீதியாக பிடிக்கவில்லை என்றால் உடனே அவர்கள் கொடுக்கும் பட்டம், "துரோகிப் பட்டமே"!!! அதன் உண்மை நிலையை ஆழமான முறையில் ஆராயாமல் அதற்கு பின்னூட்டம் பதிவிடும் சிலர் மூடர்கள் கூட்டமும் ஒருபக்கம்!!

இவ்வாறு இந்த முகநூல்களில் உலாவி வரும் சில கேவலமான ஈனப்பிறவிகளால் உண்மையான தமிழ் உணர்வாளர்கள் பாதிப்படைவதோடு அந்த உணர்வாளர்கள் முன்னெடுத்துச் செல்லும் ஆரோக்கியமான நல்ல விடயங்களும் தடைபட்டுப் போகிறது. அவ்வாறு தடைப்படுவதால் தமிழினத்திற்கே தாழ்வும், அழிவு நிலையும் ஏற்படும் அபாயம் உள்ளதை இந்த முகநூல் போலிகள் ஒருபோதும் அறிவதில்லை!!!

உலகில் முகநூல் பயன்படுத்தும் பல மொழி மக்களில் தமிழன் மட்டுமே அடுத்தவர்களுக்கு முகநூல்களில் "துரோகிப் பட்டம்" கொடுத்து சண்டையிட்டு  உலாவி கேவலப்பட்டு வருகிறான்!!!

இவ்வாறான செயல்களை நிறுத்தாத வரையும் தமிழனுக்குத் தாழ்வு நிலையே!!!

- வல்வை அகலினியன்
              (11.10.2015)

‘சார்’ என்ற வெள்ளைக்காரன் வார்த்தையில் மூழ்கி மகிழ்ந்து கொள்ளும் தமிழ் உணர்வாளர்கள்!!

தமிழகத்தில் பல தமிழ் உணர்வாளர்கள்....

ஆங்கிலம் கலப்பின்றி தமிழ்மொழி மட்டுமே பேச வேண்டுமென முழு மூச்சோடு செயற்படுபவர்களைப் பார்க்கும்போது பெருமகிழ்வடைகின்ற போதிலும்....

அவர்களை, மற்றவர்கள் வெள்ளைக்காரன் மொழியில் "சார்" என்று பெருமிதத்தோடு அழைப்பதை... ஏன் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை யாருமே ஒருபோதும் சிந்திப்பதில்லை!!??

ஒருவரை ஒருவர் அழைக்கின்ற ஆரம்பத்திலேயே, தமிழனை சாகடித்து "சார்" என்ற வெள்ளைக்காரன் வாய்வழியூடாக புகுந்து விடுகிறான்.!!!

பிறகெப்படி தமிழ் வாழும்??? நம் தமிழ் மீளூம்???

இதை ஏன் யாரும் உணர்ந்து கொள்வதில்லை..???

அவ்வாறெனில், மற்றவர்களை எவ்வாறு அழைப்பதென்று யாருமே கவலை கொள்ள வேண்டாம்.

இதோ.....

ஆண்களை "சார்" என்று அழைப்பவர்கள்...

வயதிற்கு மூத்தவர்களை "ஐயா" அல்லது "அண்ணா" என்றும்...

வயதிற்கு இளையவர்களை "தம்பி" என்றும்...

பெண்களை "மேடம்" என்று அழைப்பவர்கள்...

வயதிற்கு மூத்தவர்களை "அம்மா" அல்லது "அக்கா" என்றும்....

வயதிற்கு இளையவர்களை "தங்கை அல்லது "தங்கச்சி" என்றும்...

இருபாலரிலும் மிகவும் மதிப்பிற்குரியவர்களை "பெரியவர்" என்றும்... அழைத்துப் பாருங்கள்..!

நம் தமிழ் உறவு வார்த்தைகள் அனைவரையும் உரிமையோடு அழைத்து உறவு கொண்டாடும்.! ஒருவித உணர்வுகள் சங்கமிக்க உணர்ச்சிகள் மேலோங்கும்!!!

"சார்", "மேடம்" என்று அழைப்பதால் எந்த உரிமையும் அழைக்கப்படுபவர்கள் மேல் நமக்கு வந்து விடப்போவதில்லை!!!

மாறாக... அழைப்பவரை உயர்த்தி, அழைக்கும் நாம் தாழ்ந்தே போகிறோம்!!!

ஆகவே, இனிமேலாவது தமிழ் மொழியில் நம்மவர்களை அழைத்து, அனைவரோடும் உரிமையோடு உறவு கொண்டாடுவோம்..!

நம் தமிழையும் நாம் வளர்ப்போம்!

- வல்வை அகலினியன்.
             (15.10.2015)



இந்தப் பதிவின் இணைய வடிவம்:

1, தமிழன்
செஞ்சோலை....

போர் நடந்து கொண்டிருந்த இறுக்கமான நிலையில் யாழ்ப்பாணத்தில் 91 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போதும்....

ஒவ்வொரு இடப்பெயர்வு மத்தியிலும் தேசியத் தலைவர் அவர்களால் பெருவிருட்சமாகவே கட்டிக் பாதுகாக்கப்பட்டது செஞ்சோலை இல்லம்.

முதலில் யாழ்ப்பாணத்தில் சில இடங்களிலும்...

95 ஆண்டு இடப்பெயர்வுக்குப் பின் தற்காலிகமாக கிளிநொச்சி மாவட்டம் கனாகாம்பிகை குளம் (திருவையாறை அண்டிய பிரதேசம்) என்ற இடத்திலும்....

கிளிநொச்சி நகரம், இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பின் வடகாடு மல்லாவியிலும்....

பின்பு வள்ளிபுனத்திலும்.... பின்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணப்பாலையிலும் இறுதியில் கைவேலியிலும்,  "செஞ்சோலை இல்லம்" ஆனாதரவான ஈழக் குழந்தைகளுக்கு தாயாகவே இருந்து வந்துள்ளது.


தேசியத் தலைவர் அவர்களின் துணைவியாரோடு யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்று,  அவருடனேயே தமிழகம் வந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட மூத்த பெண் உறுப்பினரான செல்வி ஜனனி அக்கா அவர்களே.... செஞ்சோலை இல்லத்தின் தாயாக இறுதி வரை இருந்தார்.

ஜனனி அக்கா அவர்களை செஞ்சோலை குழந்தைகள் அனைவரும் "பெரியம்மா" என்றே அன்போடு அழைத்து வந்தார்கள்.

தேசியத் தலைவர் அவர்களையும் "தலைவர் மாமா" என்றே அழைக்கும் செஞ்சோலைக் குழந்தைகள், தேசியத் தலைவர் அவர்களின் துணைவியாரை "மாமி" என்றே உரிமையோடு இறுதிவரை அழைத்து வந்தனர்.

செஞ்சோலை குழந்தைகளுக்கு தாயான ஜனனி அக்கா அவர்களும் இறுதிவரை திருமணம் செய்யாமலே செஞ்சோலை குழந்தைகளுடனேயே பெரும் தாயாக வாழ்ந்து வந்தார்.

இவ்வாறு செஞ்சோலை நினைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்....

பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் செஞ்சோலை உருவாக்கப்பட்ட வரலாறை முழுமையாக பதிவு செய்கிறேன், அதுவரை காத்திருக்கவும்.

- வல்வை அகலினியன்.
              (03.10.2015)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:

1, www.asrilanka.com
கருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்!!! அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும்.!!

இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்!!!

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஈனத்தமான உளறல்கள் மூலம் தன்னுடைய கபட நிலையை வாரி கக்கியிருந்தார்.

அந்த நேர்காணலில் இறுதி யுத்ததில் இலங்கை இராணுவம் அரங்கேற்றிய யுத்தக் குற்றங்கள் பற்றியும், சில வெளிவராத தகவல்கள் பற்றியும், விடுதலைப் புலிகளின் தலைமையைப் புகழ்ந்தும் காலம் கடந்து தன்னுடைய எதிர்கால அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக உளறியிருக்கிறார்.

அவரது கோமாளித்தனமான நேர்காணலை... விடுதலைப் புலிகளின் தலைமையையும், விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறுகளையும் முழுமையாக அறிந்த எந்தவொரு தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.!! விடுதலைப் புலிகளின் சுயகட்டுப்பாடு, தனிமனித ஒழுக்கம், கடமையுணர்ச்சி, தலைமைக்கு கீழ்படிதல் இன்னும் பல தனித்துவமிக்க குணங்களை உலகத் தமிழருடன் சர்வதேசம் கூட அறிந்தே வைத்துள்ளது. ஏன், சிங்கள மக்கள் கூட புலிகளை இன ரீதியாக எதிர்த்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் மீதும் போராளிகள் மீதும் வேறு எந்தவிதமான அவதூறுகளையும் பரப்பியதில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்.

அவ்வாறு கட்டுக்கோப்புக் குலையாத விடுதலைப் புலிகள் அமைப்பின் புனிதத்தை, நிறம் மாறும் பச்சோந்திகள் வந்து படங்கள் போட்டுக் காட்டுவதால், அந்தப் பச்சோந்திகளை எந்தவொரு உண்மைத் தமிழனும் நம்பிடப் போவதில்லை!!

"கருணா...!!" தமிழ் இனத்தின் சாபக்கேடு!!! தமிழினத்தில் பிறந்த ஏழரைச் சனியன்.!! தமிழினம் அழியும் வரை "துரோகி கருணா" என்ற பெயர் வரலாற்றில் என்றுமே அழியாது!! எவரும் அழிக்கவும் முடியாது.!! முள்ளிவாய்க்கால் மண்ணில் இரத்தம் சிந்தி மடிந்து புதையுண்டு போன ஒவ்வொரு தமிழனின் ஆத்மாவும் சாபமிட்டு தூற்றிக் கொள்ளும்.... கருணா என்ற ஈனத் துரோகியை!!!

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தான் ஏன் பிரிந்தேன் என்பதை... தன்னுடைய கீழத்தரமான தவறுகளை மறைத்து விடுதலைப் புலிகள் தலைமை மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தான் ஒரு யோக்கியன் என்று தான்தோன்றித்தனமாக விளாசித் தள்ளியுள்ளார்.

உண்மையிலேயே... கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற காரணத்தை பலரும் அறிந்திருந்தாலும்... தற்போதைய இந்த நேர்காணலைப் பொறுத்தவரையும் மீண்டும் நினைவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவே செய்கிறது.

உண்மையிலேயே... கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஏன் பிரிந்தார்???

இதற்குரிய முழுமையான காரணத்தை இங்கே எழுத ஆரம்பித்தால்... இங்குள்ள இடம் போதாது! ஆகவே, சுருக்கமாக எழுத முற்படுகிறேன்.

விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு முன்னர்... இலங்கைத் தமிழர்களிடையே சாதிப்பிரச்சனைகள், மதப்பிரச்சனைகள் (மதப்பிரச்சனைகள் மிகவும் அரிதாகவே இருந்தது) உட்பட பிரதேசவாதப் பிரச்சனைகள் போன்றன மிகவும் அதிகமாகவே இருந்தன. இதை எவரும் மறுக்க முடியாது!! பிரதேசவாதப் பிரச்சனையால்... ஒரு சில ஊர்களையும், சில மாவட்டங்களையும் தாழ்த்தியும், குறைத்தும் மட்டந்தட்டி வந்தார்கள் சில அரசியல் சார்ந்த தமிழர்கள்.

விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்ற பின்னர்... தாய்நாட்டின் விடுதலைக்கான போராட்ட சூழல்களே தமிழர் பிரதேசம் எங்கும் பெருமளவு வியாபித்திருந்தமையால்... மேற்கண்ட பிரச்சனைகள் மறைந்து சிங்களம் என்ற பேரினவாதத்தை எதிர்த்துப் போராடி தமிழீழத் தனியரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே அனைத்துத் தமிழர்களது மனங்களிலும் பிரதிபலிப்பாக இருந்தது. அந்தப் புனிதம் நிறைந்த நீதியான விடுதலைப் போராட்டத்தால் சாதியப் பிரச்சனைகள், மதப்பிரச்சனைகள், பிரதேசவாதப் பிரச்சனைகள் அனைத்தும் மறந்தே போயின...

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சாதிப் பாகுபாடுகளை தனது உயரிய சிந்தனைகளாலும், விவேகமான செயற்பாடுகளாலும் இல்லாதொழித்தார் என்பதே வரலாற்று உண்மையாகும்! அது மட்டுமல்லாமல் ஆண், பெண் இருபாலரும் சமனானவர்கள் என்ற அடிப்படையில் சமூகம் மீது மிகுந்த அக்கறையும், கட்டுப்பாடும் கொண்டவர். அவர் வழி வந்த மக்களும் அவ்வாறே..!


சரி, நாம் கருணா பற்றிப் பார்ப்போம்....

கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் தலைவரோடு தலைவரின் கண்காணிப்பிலேயே வளர்ந்ததனால் அளவு கடந்த நம்பிக்கையையும், அன்பையும் தேசியத் தலைவர் அவர்கள் கருணா மீது வைத்திருந்தார். இந்த நம்பிக்கையின்பால் அந்தக்காலப் பகுதியில் தலைவரின் பாதுகாவலர்களில் ஒருவராகவும் இருந்தார்.

ஒரு சில போர் அனுபவங்கள் மூலம் மூத்த தளபதிகளில் ஒருவராக வலம் வந்த கருணா மீது, தலைவர் அதீத நம்பிக்கை வைத்திருந்த காரணத்தாலும், மட்டக்களப்பில் பிறந்த காரணத்தாலும், மட்டக்களப்பை அண்டியுள்ள காட்டுப் பகுதிகளை நன்கு அறிவார் என்ற காரணத்தாலும் கிழக்கு மாகாணத்தின் முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

தேசியத் தலைவர் அவர்களும்... தான் வளர்த்த பிள்ளை என்பதால் விடுதலைப் புலிகளின் விதிமுறைகளை மீறாமல் கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு கருணாவிற்கு அனுமதியளித்திருந்தார். அந்தச் சுதந்திரம் என்பது அவரது அடி மனதிற்குள் பல ஆசைகளுக்கு தூபமிட்டது.!!

கருணா பங்கு பற்றிய போர் சம்மந்தாமான இராணுவ விபரங்களைப் பற்றி இரண்டு தினங்களுக்கு முன்பு மதிப்பிற்குரிய திரு. ஈழத்து துரோணர் அண்ணா அவர்கள் விரிவாக எழுதியிருந்தார். ஆகவே, அதுபற்றிய விபரங்கள் இங்கே தேவையற்றது என நினைக்கிறேன்.


வன்னியில் இருந்த தலைமையோடு தேவைக்கேற்ப நேரடியாகச் சந்தித்து தலைமையின் நேரடிக் கட்டளைக்குக் கீழ் செயற்பட வடபிராந்தியம் முழுவதுமுள்ள தளபதிகள் சில குறிப்பிட்ட முக்கிய போராளிகளால் இலகுவில் முடிந்தது. தலைவராலும் நினைத்தவுடன் சந்திக்க முடிந்தது. ஆனால், கிழக்கு மாகாணத்தில் உள்ள கருணாவிற்கு. அவ்வாறு இலகுவாக சந்திக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. மிகவும் அவசரம் என்றால் மட்டுமே காட்டு வழியூடாக பயணமாகி பல வாரங்களின் பின் வன்னி வந்து தலைவரைச் சந்திக்க முடியும்.

மேற்கண்ட காரணங்களை வைத்தே விடுதலைப் புலிகளின் விதிமுறைகளை மீறாமல் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு கருணாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இக் காரணங்களைச் சாதகமாகப் பயன்படுத்திய கருணா, தமிழர்களால் போற்றப்படும் தலைவரின் உயரிய எண்ணங்களை களங்கப்படுத்தும் விதமாகவும், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை மீறும் செயலாகவும், தனது கட்டுப்பாட்டிலேயே கிழக்குப் பிராந்தியம் முழுவதும் இருப்பதால் தனது ஆளுகைக்குட்பட்ட பிராந்தியத்தில் தலைமைக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக பல திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

ஏற்கனவே கருணாவிற்கு பிரதேசவாதம் மீது நாட்டம் உண்டு என்பதனால் ஒரு சில தளபதிகள் தன்னை ஒதுக்குவதாக தவறாக நினைத்துக் கொண்டு முரண்பட்டுள்ளார். உண்மையிலேயே தலைவரிடம் இப் பிரச்சனையைத் தெரியப்படுத்தி இருந்தால் அவர் தீர்த்து வைத்திருப்பார். தலைவர் அனைத்துப் போராளிகளையும் தனது பிள்ளைகள் என்றே கருதுபவர். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சில போராளிகளை தனக்கு அருகிலேயே தனது பாதுகாவலராக அழகுபடுத்தி வைத்திருப்பவர். கருணாவின் பிரதேசவாதப் பிரச்சனை தெரிந்தும் சம்மந்தப்பட்ட தளபதிகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவரின் அடி மனதிலிருந்த அழுக்குகளை அவ்வேளையில் யாராலும் உணரமுடியவில்லை. கிழக்குப் பிராந்தியமும், வன்னிப் பிராந்தியமும் தனித்தனியாக இருந்தமையும் மற்றொரு காரணம்.

இவ்வாறான காரணங்களை அறிந்து கொண்ட கருணா, தனக்கு விசுவாசமான ஒரு சில கீழ்நிலைத் தளபதிகளையும். ஒரு சில போராளிகளையும் அழைத்து "மட்டக்களப்பு மாவட்ட போராளிகள்" பிரதேசவாத ரீதியாக ஒதுக்கப்படுவாதாக ஒரு போலியான பிம்பத்தை அவர்களின் மனதில் பதியும்படி செய்தார். அத்தோடு, வன்னியில் உள்ள போராளிகளுக்கே அதிகாமான சலுகைகள் வழங்கப்படுவதாகவும் ஒரு பொய்யான தோற்றப்பாட்டையும் உருவாக்கினார். ஆனால், ஒரு சில போராளிகளைத் தவிர மற்றைய போராளிகள் இவரது கூற்றுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களது மனதில் தேசியத் தலைவர் அவர்களே மனங்கவர்ந்த தலைவராக இருந்தார்.

அத்தோடு நின்றுவிடாமல்... தனது கட்டுப்பாட்டில் உள்ள கிழக்குப் பிராந்தியத்தில் தனது படைப்பிரிவில் உள்ள போராளிகளிடத்திலே தனியாக கடற்பிரிவு, புலனாய்வுப் பிரிவு, நிதிப்பிரிவு, அரசியற்பிரிவு மற்றும் மருத்துவப் பிரிவு என பல பிரிவுகளை தான்தோன்றித்தனமாக உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். மேலும் தனக்கு விசுவாசமான ஒரு சில போராளிகளை சமாதான காலத்திலே மிகவும் ரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து படகு கட்டுமானங்களையும் கற்க வைத்தார்.

மேற்சொன்ன காரணங்களோடு நின்று விடாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் செல்வந்தர்களை ரகசியமாக மிரட்டி பெருமளவு பணங்களையும் பெற்று வந்தார். அந்தப் பணங்களை வைத்து வெளிநாடுகளில் தொழில் முதலீடுகளையும் செய்து வந்தார்.

விடுதலைப் புலிகளின் அமைப்பில் நிதிக் கையாளுகை, நிதிப் பங்கீடு என்பன துறை சார்ந்ததாகவும், படைப்பிரிவுகள் சார்ந்ததாகவும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஏற்ப வகையில் அந்தந்த மாவட்டம் துறைகள் சார்ந்த தளபதிகள் அனைவரும் ஒன்று கூடியே எவ்வளவு நிதி வேண்டுமென முடிவெடுப்பார்கள். (தளபதிகள் இல்லாத பட்சத்தில் கீழ்நிலைத் தளபதிகள் பங்கேற்பார்கள்) அந்த வகையில் எந்தவிதக் குறையுமின்றி தலைவரின் அனுமதியுடன் நிதிப்பிரிவு பொறுப்பாளர் தமிழேந்தி அப்பாவால் வழங்கப்படும். மாத இறுதியில் முழுமையான கணக்கறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும்.

மேலதிக செலவுகள் செய்தாலும்... அப்பணம் எப்படி எங்கிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது என ஆதாரத்துடன் முழுமையான அறிக்கை கொடுக்க வேண்டும். இந்த மேலதிக செலவு விடயத்தில்தான் கருணா சிக்க வேண்டிய நிலை உருவாகியது.

மேலதிக செலவு விபரங்களை கணக்கறிக்கை காட்டாமல் பல மறைமுகமான தொழில்களை உருவாக்கி பல கோடிகளை இலாபமாக பெற்று வந்தார். ஏற்கனவே பிரதேசவாதம் அவரது ஆழ்மனதில் தீயாக எரிந்து கொண்டிருந்தமையால்... இவையனைத்தையும் மனதில் வைத்து கிழக்குப் பிராந்தியம் முழுவதும் தனது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் எனவும்... தனது பிரிவில் உள்ள போராளிகள் தனது கட்டுப்பாட்டிலும்... தான்மட்டுமே தலைவரின் கீழ் செயற்பட வேண்டும் என்ற எண்ணத்துடனேயுமே பல அடித்தளங்களையிட்டு வந்தார்.


இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக பல நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் கருணாவிற்கு ஏற்பட்டது. அந்த நேரத்திலும் தேசியத் தலைவர் அவர்கள் கருணா மீது அளவு கடந்த அன்பினையும், நம்பிக்கையுமே வைத்திருந்தார். கடுகளவும் ஒதுக்கவேயில்லை... பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து கருணா பிரியும் வரை கருணாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் நெஞ்சத்தில் வைத்து முன்னிலைப்படுத்தி சர்வதேசம் முழுவதும் பேரும், புகழும் அடையும்படி உருவாக்கியிருந்தார். தான் வளர்த்த பிள்ளைகளை எந்தவொரு தாயும் பாகுபாடு பார்த்து ஒதுக்குவதில்லை. அதேபோல்தான் தேசியத் தலைவரும் தான் வளர்த்த பிள்ளைகளை ஒருபோதும் பாகுபாடு பார்த்து ஒதுக்கியதில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் அதற்கு இடமுமில்லை!!!

சமாதான காலத்தில் சீரான போக்குவரத்து இருந்தமையால் கருணாவிடம் பணம் பறி கொடுத்த ஒரு சில மக்களும்... இவரது பிரதேசவாதம் மற்றும் தனி நிர்வாகம் பற்றி அறிந்த சில போராளிகளும் வடபிராந்தியத்தின் ஒரு சில தளபதிகள் ஊடாக தலைவருக்குத் தெரியப்படுத்தினார்கள். இவ்வேளையில் மேலதிகமாகப் பெற்றுக் நிதி கணக்கினை முறையாக கட்டாத பட்சத்திலேயே கருணா மீதான நிதி மோசடியை தமிழேந்தி அப்பா தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதைப்பற்றி விசாரிப்பதற்காகவே தலைவர் அவர்கள், கருணாவை வன்னிக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இதனாலேயே தன்னை மாட்டிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழேந்தி அப்பா மற்றும் சில தளபதிகளையும் பின்னாளில் விசாரனைகளை மேற்கொண்ட பொட்டு அம்மான் அவர்களையும் மிகவும் கடுமையாக கருணா விமர்சித்தார்.

தன்னை எதற்காக தலைவர் அழைக்கிறார் என நன்றாகப் புரிந்து கொண்ட கருணா... மேலும், தன்னுடைய பிரதேசவாதம், தனிநிர்வாகம் மற்றும் சில மறைமுகமான விடயங்களும் தெரிந்துவிடும் அதனால், தான் தண்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவும், விடுதலைப் புலிகளின் விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறினால், மாத்தையாவிற்கு ஏற்பட்ட நிலையே தனக்கும் ஏற்படலாம் என்ற பேரச்சம் காரணமாகவும் தலைவரை சந்திக்காமல் பதற்றத்துடன் திகைத்துப் போய் தவிர்த்து இருந்தார்.

விடுதலைப் புலிகளின் விதிமுறைகளை மீறினால் சாதாரண போராளிகள் முதல் பெரும்நிலை தளபதிகள் என அனைவருக்கும் ஒரே விசாரனை... ஒரே தண்டனைதான். மிகவும் ஒழுக்கமான, இறுக்கமுடைய கட்டுப்பாடுடனேயே புலிகள் அமைப்பு இயங்கி வந்தமையால் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாகி தனியான ஒரு அரசங்கத்தை நடாத்தி மக்களின் மனங்கவர்ந்த வீரப்புருசர்கள் ஆனார்கள்.

இவ்வாறு இருக்க... தன்னை எவ்வாறாயினும் தனது இடத்தில் வைத்தே புலனாய்வுப் பிரிவு போராளிகள் ஊடாக கைது செய்ய பொட்டம்மான் முயற்சிப்பார் என்பதை அறிந்திருந்த கருணா, தமிழர் பிரதேசங்களில் எங்குமே ஓடி ஒழிந்து கொள்ள முடியாது என்பதனால்... என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். இவ்வேளையில்தான் சமாதான காலத்தில் வெளிநாடு சென்றுவரும் வேளைகளில் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய சிங்கள அமைச்சரான மிலிந்த மொறகொட மற்றும் ஒரு சில அமைச்சருடன் ஏற்கனவே நல்ல நட்பை பேணிவந்தார். இவ்வேளையில் அவர்களின் நினைவு வரவே அவர்களுடன் பேசி தனக்குப் பாதுகாப்புத் தரும்படி கெஞ்சினார்.

அவர்களும் இராணுவத்துடன் பேசி கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு நிறைந்த "மின்னேரியா" இராணுவ முகாமிற்குள் ஒருசில சகாக்களுடன் தங்கியிருப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

விமானப் படையின் உலங்கு வாணூர்தி ஊடாக அழைத்துச் செல்லப்பட்ட கருணாவும் ஒருசில சகாக்களும் மின்னேரியா முகாமில் பல சுகபோகங்களுடன் மிதந்தார்கள்.

பின் குள்ளநரி ரணில் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து பல சூழ்ச்சிகள், பல தந்துரோபாயங்கள் மூலம் கருணாவை தங்களது சதி வலைக்குள் விழ வைத்து கருணாவின் கனவான தனியான நிர்வாகம், பிரதேசவாதம் போன்றவற்றிற்கு துணையிருப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி தங்களை விட்டு விலகாத மாதிரி பாலியல் ரீதியாகவும் கருணாவை வளைத்துப் போட்டார்கள், ரணிலும் இராணுவ அதிகாரிகளும்.!!

ரணில் மற்றும் இராணுவத்தின் சதி வலைக்குள் விழுந்த கருணா... விடுதலைப் புலிகள் மீது அவதூறுகளைப் பரப்பி விடுதலைப் புலிகளின் தலைமையின் போக்கு தனக்குப் பிடிக்காமலேயே தனியாக பிரிந்து செல்வதாகக் கூறி தனக்கு விசுவாசமான சகாக்களுடன் "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்" என்றொரு பிரிவுடன் சிங்கள அரசோடு கூட்டுச் சேர்ந்தார். மற்றவை அனைவரும் அறிந்ததே.


இருந்தும் கருணா செய்த மிகப்பெரிய தேசத் துரோகங்கள் பின்வருமாறு...

கடந்த சில தினங்களுக்கு முன் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியின் நேர்காணலில் தனது அரசியல் தோல்வியின் காரணமாக நிறம் மாறும் பச்சோந்தியாக மாறி கண்டபடி பிதற்றியிருக்கிறார். அவரின் நேர்காணலலை உள்வாங்கிக் கொண்டு....

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்றும் மக்களோடு மக்களாக வந்து தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்றும் இதுவே விடுதலைப் புலிகள் செய்த மிகப்பெரிய போர்க்குற்றம் எனவும் இலங்கை அரசவாதங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஊளையிட்டிருந்தார்.

ஆனால், இறுதி யுத்தத்தில் உண்மையில் நடந்ததோ வேறு.!!!

கருணாவிற்கு மிகவும் நெருக்கமான அதுவும் வன்னிப் பிராந்தியம் முழுவதும் அறிந்த கருணாவின் சகாக்கள் கருணாவின் வழி காட்டலின்படி இலங்கை அரசால் விலைக்கு வாங்கப்பட்டார்கள். பின்பு அவர்களை இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்கள் சிங்கள இராணுவ அதிகாரிகள்.

அவ்வேளையில்தான் மக்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறிச் செல்வதற்காக விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்தி சில சில பகுதிகள் ஊடாக வழி விட்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி சூனியப் பிரதேசம் ஆகும். இந்தச் சூனியப் பிரதேசத்திற்குள்ளேயே கருணாவின் சகாக்களானவர்கள் ஓரிரு இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு சில வீரர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக மறைவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.


புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் நெருங்கவும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளே சுடுவது போல் கருணாவின் சாகாக்கள் மக்களைச் சுட்டு படுகொலை செய்து கொண்டிருந்தார்கள்.!! பின் ஒரு சிலரை மட்டுமே தப்ப விடுவது போல் செய்து, தப்பியவர்களை வைத்தே ஊடகங்கள் ஊடாக சர்வதேசத்திற்கு "புலிகள் வெளியேற விடாமல் தடுத்தார்கள். மீறியவர்களை சுட்டுக் கொன்றார்கள்" என்று ஒரு வீண்பழியை புலிகள் மீது சுமத்தி இன்னும் இன்னும் விடுதலைப் புலிகளை இறுக்குவதற்கும்.!! மற்றும் சர்வதேச உதவியுடன் புலிகளை முற்றாக அழித்தொழிப்பதற்கும் கருணாவே முக்கிய துணையாக நின்றார்.

இவ்வாறான பல இழிவான செயல்களை கருணாவால் அனுப்பப்பட்ட சகாக்களே நிறைவேற்றினார்கள். இராணுவத்தோடு சேர்ந்து மக்களையும் அருகிலிருந்து அழித்தார்கள்.

கருணா, சிங்களப் படைகளுக்கு முக்கிய துணையாக இருந்தமைக்கான மிகவும் முக்கியமான காரணம் என்னவெனில்... விடுதலைப் புலிகள் இருந்தால் தான் நிச்சயமாக கொல்லப்படுவேன் என்ற மிகப்பெரிய உயிர்ப் பயமே!!!

தனது ஒற்றை உயிருக்காக ஒரு இனத்தையும், ஒரு புனிதமான விடுதலைப் போராட்டத்தையும் அழித்து தமிழீழ தனியரசு உருவாக இருந்த வேளை அதையும் கனவாக மாற்றிய மிகப் பெரிய தேச இனத் துரோகிதான் இந்தக் கருணா!!! இவ்வாறான ஒரு கேவலமான உயிர் இத்தேசத்தில் உலாவத்தான் வேண்டுமா..????

தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது... தமது உயிரைப் பாதுகாக்க பயத்துடனும், பரபரப்புடனும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் ஓடிய மக்களின் கைப் பொதிகளில் தாணியங்கிக் குண்டுகளை வைத்து விட்டு. சற்றுத் தொலைவில் இராணுவத்தினருடன் இருந்து கொண்டு Remote Control மூலம் இராணுவச் சோதணைகளுக்கு உட்படுத்தப்படும்போது அழுத்தி வெடிக்க வைத்து அப்பாவி மக்களையும் கொலை செய்தது மட்டுமின்றி தமக்கு அருகில் வருகின்ற பொது மக்களையும் பயத்தில் சுட்டுக் கொலை செய்யும் மன நிலையையும் இராணுவத்திற்கு வழி சமைத்துக் கொடுத்தது கருணாவின் சகாக்களே.!!! இதுவே இலங்கை இராணுவத்திற்கு கருணா துணை போன பெரும் இனத்துரோகமாகும்!!!

மற்றது மக்களை கேடயமாகப் பயன் படுத்தியது. 

கருணா, தான் கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் யுத்தம் புரியும் போது மக்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு நகர்த்தியதாகவும்... ஆனால், இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்றும் அப்பட்டமாக பழி சுமத்துகிறார். உண்மையிலேயே கருணா ஒரு படு முட்டாள் என்றுதான் கூற வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து, அனைத்து மக்களும் வெளியேறவில்லை 60 வீதமான மக்களே புலிகளோடு புலிகளின் பகுதியான வன்னிக்குச் சென்றார்கள். கிளிநொச்சியிலிருந்து மக்களை வெளியேற்றும் போது அந்த யுத்தகளமானது வேறு வகையானது அதுமட்டுமல்லாமல் பல திட்ட நகர்வோடு மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை என்பதால், முன்கூட்டியே தமது கட்டுப்பாட்டிற்குள் உள்ள மற்றைய பிரதேசத்திற்குள் மக்களை பாதுகாப்புடன் நகர்த்தினார்கள்.

ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தமானது அவ்வாறில்லை. ஒரு வீட்டைச் சுற்றி பலர் தாக்கும் போது வீட்டிற்குள் உள்ள பாதுகாப்பன பகுதிகளுக்குள்தான் பாதுகாப்புத் தேடிக் கொள்வார்களே தவிர தாக்குபவர்களின் திசையை நோக்கி எவரும் ஓடமாட்டார்கள். அதுபோல்தான் மிகவும் கொடியது முள்ளிவாய்க்கால் யுத்தமும். பல தசாப்தங்களாக பல யுத்தங்களூடாக விடுதலைப் புலிகளையே வீரப் புருசர்களாக, பாதுகாவலர்களாக ஏற்றுக் கொண்டு எல்லாச் சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பக்கத்திலேயே இருந்த மக்கள் எப்படி இராணுவத்தின் காட்டுப்பாட்டிற்குள் போக விரும்புவார்கள்..?

மற்றம், சமாதான காலத்தின் பின்னர் வன்னியில் வாழ்ந்த 80 வீதமான மக்களை இலங்கை அரசானது புலிகளாகத்தான் கணித்தார்கள். காரணம், அங்கே இருந்த மக்கள் அனைவரும் புலிகளோடு ஒன்றோடு ஒன்றாகவே மிகவும் நெருக்கமாகவே இருந்தார்கள். அப்படியான மக்களை இலங்கை இராணுவத்தினர் இருகை கூப்பி வரவேற்பார்களா.??? தமிழர்களும் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை அறியாதவர்களா என்ன..???

இருந்தும் இறுதி யுத்தத்தில் எதையும் எதிர்பார்க்காத மக்கள், நிலைமை மிகவும் மோசமாகி இறுகிக் கொண்டு வரவே கண்ணெதிரே உறவுகள் ஒவ்வொன்றாக மடிந்து வர மிகவும் விரக்தியான நிலையிலேயே உயிரைப் பாதுகாக்க தன்னிலை மறந்து இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றார்கள்.

எந்த யுத்ததிலும் பொது மக்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் படுத்தியதில்லை. மாறாக பல தசாப்தங்களாக பொதுமக்களே யுத்த களத்திலே நேரடியாக நின்று பல வகையான உதவிகளைச் செய்து வந்தார்கள். ஓயாத அலைகள் 1 முதல் 4 வரை நடந்த யுத்தங்களில் மக்களே விடப்பிடியாக வலிந்து சென்று பல வகையான உதவிகளைப் புரிந்தார்கள்.

இதனாலேயே வன்னியில் வாழ்ந்த மக்கள் புலிகளாகக் கருதப்பட்டு மிகவும் கொடூரமாக பழி வாங்கும் அளவுக்கு திட்டம் போட்டு அழிக்கப்பட்டார்கள். நடந்த இனப்படுகொலையிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றவே கருணா துணையிருந்து மிகப் பெரிய துரோகம் செய்தார்.


தற்போது... இல்லாத ஒரு புரட்சியை உருவாக்கி தமிழர்களைப் பாதுகாக்க போலியாகத் துடிக்கும் கருணாவிடம் சில கேள்விகள்....

■ தேசியத் தலைவர் அவர்கள் அவரது வாயால் ஒருபோதும் தன்னை துரோகி என்றோ, வேறு விதமாகவோ விமர்சனங்கள் எதுவுமே சொல்லவில்லை என்று அடித்துக் கூறும் கருணா, தலைவரின் அழைப்பை ஏற்று நேரடியாகச் சென்று விளங்கப்படுத்தி ஒரு தீர்வு கண்டிருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை??

தான் செய்த துரோகங்கள் தெரிந்து மாத்தையா போல் தனக்கும் அதே நிலை ஏற்படும் என்ற அச்சம்தானே காரணம்??!!

■ சரி, தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவரெனில் பிரிந்து சென்றபின் தனியாகவே நின்று அரசியலில் ஈடுபட்டிருக்கலாமே.?? ஏன், தமிழர்களின் எதிரி இனமான சிங்களத்துடன் கூட்டுச் சேர வேண்டும்???

■ பெரிதாக எதுவுமே தெரியாத போராளிகளை இராணுவம் கைது செய்தாலே... அந்தப் போராளிகள் மூலம் விடுதலைப் புலிகள் பற்றிய ரகசியம் தெரிந்து கொள்ள பல வகையான துன்புறுத்தல்களை ஏற்படுத்துவார்கள். அவ்வாறு இருக்கையில் விடுதலைப் புலிகள் பற்றி பல விடயங்கள் அறிந்தும், ஒரு முதன்மைத் தளபதியாக இருந்தும் கிழக்கு மாகாணம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கருணா, தங்களுடன் ஒட்டிக் கொள்ளும் போது கொஞ்சிக் குலாவ... இலங்கை இராணுவம் என்ன முட்டாள்களா?

ஆனால், தான் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை என்றும், விடுதலைப் புலிகள் பற்றிய எந்தத் தகவல்களையும் வழங்கவில்லை என்றும் முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கிறார்.

■ மகிந்தாவின் கட்சியில் மகிந்தாவிற்கு அடுத்த பிரதித் தலைவராக தானே இருப்பதாக சகவாசமாக கூறியுள்ளார்!!! போதாக் குறைக்கு... இதுவரையும் எந்தத் தமிழனுக்கும் கிடைக்காத உயர் பதவி என்றார். (பதவி மோகத்தில்)

வளர்த்துவிட்டு பெரும் செல்வாக்கும், புகழும் பெற்றுத் தந்த தாய்க்கு நிகரான தேசியத் தலைவருக்கே துரோகம் இழைத்து, தமிழர்களின் எதிரியான தம் கூட்டத்தோடு சேர்ந்த கருணாவை தனக்கு அடுத்த தலைவராக நியமிப்பதற்கு மகிந்தா ஒரு மடையரா? சுதந்திரக் கட்சியில் உள்ள அடுத்தநிலை தலைவர்களெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்க அவர்கள் எல்லாம் என்ன மூடர்களா.??

வளர்த்த தாய்க்கே துரோகம் இழைத்தவர் தனக்கும் துரோகம் இழைக்காமல் இருப்பார் என்ற நம்பாமலா கருணாவை பிரதித் தலைவராக்கினார் மகிந்தர்.???

அல்லது சுதந்திரக் கட்சியின் தலைவர் என கருணா பிதற்றுவதெல்லாம் பொய்யானதா.??

■ மகிந்தாவோடு நக்கித் திரியும்போது மகிந்தா சிறந்த தலைவர் எனவும், இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் எனவும் கொக்கரித்து திரிந்துவிட்டு... மகிந்தா ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி அடைந்தபோது எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்து விட்டு, தற்போது கடந்த பாரளுமன்றத் தேர்தலில் மகிந்தாவும் அவரது சகோதரர்களும் அரசியலில் நிராகரிக்கப்பட்டு முழுமையாக ஓரங்கட்டப்பட்டபின் செத்த பாம்பிற்கு தான் பயப்பட மாட்டேன் என்றும், தவறுகள் செய்யதால், அவர்கள் யாராக இருந்தாலும் விமர்சிப்பேன் எனவும் ஊளையிடுவது எதிர்கட்சியை அண்டிப் பிழைக்கவா??


■ தேசியத் தலைவரின் உடலென அடையாளம் காட்டச் சென்ற போது... "தேசியத் தலைவரே என்றும், பல உயிர்களைக் கொல்ல காரணமானவரின் நிலை இதுவே என்றும்" மகிழ்வுடன் கூறிவிட்டு தற்போது தேசியத் தலைவர் பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்???

■ தேசியத் தலைவரின் உடல்பற்றி யாருக்குமே தெரியாத ஒரு அடையாளம் தனக்கு மட்டுமே தெரியும் என்றால்... தலைவரின் மனைவி யார்???

சரி தெரியாத அடையாளத்தை விடுவோம், பாடசாலையில் கல்வி கற்ற காலங்களில் கரி மருந்தினைப் பயன்படுத்தி வெடிப்பொருள் ஒன்றினை உருவாக்கும் போது தவறுதலாக வெடித்து தலைவரது காலில் பட்டு எரியுண்டமை யாவரும் அறிந்ததே... பின்னர் எரிந்த காயம் கருமை நிறத்துடன் இருந்தமையால் "கரிகாலன்" என்ற பெயர் வரக் காரணமாக அமைந்தது என்பது அனைவருமே அறிந்த வரலாற்று உண்மையாகும்!

பலரும் அறிந்த அந்தக் கரிய நிறமுடைய கால் அடையாளத்தை ஏன் பலரும் பார்க்கும்படியாக காட்டவில்லை???

■ தலைவரின் உடலெனக் காட்டும்போது ஒட்டுமொத்த தமிழினமே செய்வதறியாமல் கண்ணீர் விட்டு கலங்கிய போது... தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவரெனில் அவர்களின் அப்போதைய மனநிலையை உணர்ந்து அடையாளம் காட்டச் செல்லாமல் தவிர்த்து இலங்கை அரசின் முகத்தில் கரியைப் பூசி இருக்கலாமே.??? ஏன் அவ்வாறு செய்யவில்லை.???

அடையாளம் காட்டுவதாகக் காட்டிக் கொடுத்து அவ்வேளையிலேயே தான் ஒரு தமிழனத்தின் துரோகி எனக் காட்டிக் கொள்ளவா.???

■ தாய் மண்ணின் விடிவிற்காக போராடி மடிந்த மாவீரர்களை மதிப்பதாகக் கூறும் கருணா.... இலங்கை அரசோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் போது "மாவீரர் துயிலும் இல்லங்கள்" இராணுவத்தால் உடைக்கப்படும் போது தடுத்திருக்கலாமே.??? ஏன் தடுக்கவில்லை.???

மாவீரர்கள் மிகவும் தூய்மையானவர்கள் என்பதை கருணா அறியாதவரா???

■ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பின்பு கொழும்பில் உள்ள யாழ் தமிழர்களிடம் கப்பம் கேட்டு மிரட்டிக் கடத்திய வரலாறுகளையும், பணம் கட்ட வழியற்றவர்களை தடயங்கள் தெரியாமல் கொலைகள் செய்து மறைத்ததையும் கொழும்பில் "வெள்ளை வான்" கடத்தலுக்கு மிகவும் பலம் சேர்த்த பெருமையையும் ஏன் மறைக்க வேண்டும்.???

பல சாட்சிகளின் அடையாளங்களாக கப்பம் கட்டித் தப்பியவர்கள் இன்றும் பல நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை கருணா மறந்துவிடக் கூடாது!!!

இது போன்ற எண்ணற்ற பல கேள்விகள் உண்டு இடம் போதாமையால் கேள்விகளை இத்துடன் நிறுத்துகின்றேன்.

எதுவாக இருந்தாலும்...

கருணா என்ற ஒற்றைத் துரோகியால் பல உன்னதமான போராளிகள் மற்றும் இவரைச் சார்ந்த உறவுகளும் இன்றுவரையும் சொல்ல முடியாத பல மனவலிகளுடன் தொடர்ந்து... மிகவும் பாதிக்கப்பட்டே வருகின்றனர்.

ஒரு ஊரில் பிறந்து பிரபலமான தனி ஒருவர் தேசத் துரோகம் செய்தால் அவரைச் சார்ந்த உறவுகளைத் தவிர மற்ற அவரது ஊரவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இது தனியொருவராக வாழ்ந்தவரின் நிலை! ஆனால், கருணாவின் நிலை அவ்வாறு இல்லை!!!

கருணா ஒரு படையணியின் முதன்மைத் தளபதி. புலிகள் அமைப்பை விட்டு பிரியும் போது தான் மட்டும் தனியாக பிரிந்து சென்றிருந்தால்... இன்று இவரது தேசத் துரோகச்செயலால் எந்தவொரு போராளிகளும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கூடவே தனக்கு விசுவாசமான சில சகாக்களை கூட்டிச் சென்றமையாலையே அவர்கள் எந்தப் போராளிகள் எனத் தெரியாத மக்கள் உன்னதமான உண்மைப் போராளிகளையும் "கருணா குழு" என்றே அழைத்து வருகிறார்கள். தாய்மண்ணின் விடிவிற்காக தேசியத் தலைவரின்பால் ஈர்க்கப்பட்டு கருணாவின் கீழிருந்த போராளிகள் பலரது தற்போதைய வாழ்க்கை இன்றுவரையும் மிகவும் சொல்லணத் துயரம் நிறைந்தவையாகவே தொடர்கின்றது!!!

காயப்பட்டு துடித்த போதும், உறுப்புக்களை இழந்த போதும், பட்டினிகள் இருந்து பல வகையான சோதனைகளை அனுபவித்த போதும் இல்லாத மிகக் கொடிய வலி கருணாவின் ஈனத்தனமான செயலாலும் "கருணா குழு" என மற்றவர்கள் மறைமுகமாகத் தாக்கும் போதும் அந்த உன்னதமான தூய்மைப் போராளிகள் அனுபவிக்கும் நரகவேதனையானது... அனைவரது நெஞ்சிலும் இரத்தம் ஒழுகச் செய்யும்!!!

இவ்வாறான காரணங்களால்... இவரது பிரிவிலிருந்த பல போராளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். மட்டக்களப்பு என்றவுடன் அங்கு வாழ்கின்ற வலி நிறைந்த மக்களையும், உன்னதமான போராளிகளையும் எந்தவித அறிவுமின்றி கருணா என்ற ஒரு தேசத் துரோகியை எண்ணத்தில் வைத்துக் கொண்டு கொச்சைப்படுத்தி மறைமுகமாக "துரோகிகள்" என விமர்சிப்பவர்கள்தான் உண்மையான தேசத் துரோகிகள் ஆவார்கள்.

காரணம், நாட்டிற்காக களமாடிய போராளிகளையும், அந்தப் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்த மக்களையும் விமர்சித்து துரோகப் பட்டம் கொடுப்பவர்களை நாம் வேறு எவ்வாறு அழைக்க முடியும்.?? இவ்வாறான செயல்களும் ஒரு வகையான தேசத் துரோகம்தான்.??

தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர் தெய்வங்களை உண்மையிலேயே மதித்து, தாய் மண்ணின் விடிவிற்காக தேசியத் தலைவரை, தலைவராக ஏற்றுக் கொண்டு தனது தலைமையின் கீழ் கடைசி வரை நின்று களமாடிய உன்னதமான போராளிகளை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என கருணா நினைத்தால்...

இனியும் நல்லது செய்ய வேண்டும் என கருணா நினைத்தால்...

இனியும் வாயால் வடை சுட்டு தமிழர்களையும் போராளிகளையும், மாவீரர் தெய்வங்களையும் தேசியத் தலைவரையும் கேவலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என கருணா நினைத்தால்....

மேற்கூறிய அனைத்துக் காரணங்களையும் கவனத்தில் கொண்டு உண்மையிலேயே கருணா ஒரு ஆண்மகனாக... தமிழ்மகனாக இருந்தால்.... தமிழர்களும் போராளிகளும் இனியும் நிம்மதியாக வாழ தான் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணா நினைத்தால்...

இனப்படுகொலை செய்த மகிந்தா மற்றும் மகிந்தாவின் பட்டாளங்களை தன் சக்திக்கு முடிந்தவரை கொலை செய்து விட்டு... தப்பி ஓடுவது

அல்லது......

தான் செய்தது... மாபெரும் துரோகம் என்று அறிவித்து தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு தற்கொலை செய்து கொள்வதே, தற்போது கருணாவிற்கு இருக்கும் ஒரே வழி!!!

- வல்வை அகலினியன்
               (31.08.2015)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:
1, www.eelamview.com
2, www.vivasaayi.com
3, www.pathivu.com
4, www.eelavidiyal.com
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலைவர் பிரபாகரன் மயம்!!

“பிரபாகரன்” என்ற ஒற்றைச் சொல்லே தமிழகத்தில் புதிய சரித்திரத்தினைப் படைக்கப் போகின்றது!!

தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் உலகம் எங்கும் உள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் மற்றும் மக்களின் உணர்வுகள் தொடர்பில் ஈழம்ஈநியூஸ் தனது முகநூலில் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட மற்றும் வாசகர்களிடம் இருந்து உள்வாங்கிய கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றது.

தமிழகத்தின் ஏற்பட்டுள்ள மாற்றம் எமது விடுதலைப்போருக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக மாற்றம் பெற்று வருவதை இதனூடாக நாம் காணமுடிகின்றது.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலைவர் பிரபாகரன் மயம்!!

உள்ளம் பூரிப்படைகின்றது!
மெய் சிலிர்க்கின்றது!!
இனம் புரியாத பெரும் மகிழ்ச்சி!!!

தமிழ்நாட்டில் எந்தத் தலைவனுக்கும் இல்லாத மதிப்பும், மரியாதையும், பிறந்த நாள் கொண்டாட்டங்களும் எம் தேசியத் தலைவனுக்கே கிடைத்துள்ளது..!

இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பார்க்கும் போது, உலகத் தமிழினத்தின் ஒரே தலைவன் பிரபாகரன்தான் என்பதை ஆணித்தரமாகவும், உறுதியாகவும் நிரூபித்துள்ளது!!

தமிழக இளைஞர்களின் ஒவ்வொரு இதயங்களிலும் “பிரபாகரன்” என்ற பெயர் ஒன்று இருந்தாலே போதும் அவர்கள் வீறு கொண்டு எழுவார்கள்.!!

தமிழ்நாட்டில் “பிரபாகரன்” என்ற பெயர்தான் சாதியங்களையும், மதங்களையும் தொலைத்து புதியதொரு சகாப்தத்தையும், புதியதொரு தேசத்தையும் உருவாக்கப் போகிறது!!!

பிரபாகரன் பெயர் ஒரு சக்தி!
பிரபாகரன் பெயர் ஒரு தவம்!!
பிரபாகரன் பெயர் ஒரு வரம்!!!
பிரபாகரன் பெயர் ஒரு ஈரம்!!!!

இனிமேல் எந்த மாற்றான் தலைவனாலும் தடுக்க முடியாது!!

நீங்கள் நேரில் செய்யாததை, “பிரபாகரன்” என்ற ஒற்றைச் சொல்லே தமிழகத்தில் புதிய சரித்திரத்தினைப் படைக்கப் போகின்றது!!

- வல்வை அகலினியன்
             (27.11.2013)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:
1, www.eelamview.com
2, www.tamilwaiting.blogspot.com

அப்பாவிற்காக ஒரு கவிதை..!


நான் சும்மா ஒரு கவிதை எழுதிக் கொண்டிருந்தேன், அந்த வேளை என் மகள் தரணிகா என்னிடம் வந்து,

"என்னப்பா செய்றிங்க" எனக் கேட்டாள்

நான் "கவிதை எழுதுகிறேனம்மா" என்றேன்.

மகளும் உடனே,
"எனக்கும் ஒரு பேனையும், பேப்பரும் தாங்கப்பா" என்றாள்.

நான் "எதற்கம்மா" என்றேன்.

என் மகளோ,
"உங்களுக்குத்தான் கவிதை எழுதத் தெரியுமா, எனக்கும் எழுதத் தெரியுமே" என்று,

சிறிது நேரத்தில் ஒரு படமும், இன்னோரு காகிதத்தில் எதையோ கிறுக்கினது போல் இருந்ததையும் தந்தாள்.

"இது என்னம்மா" என்று கேட்டேன்,

"இது அப்பாவும், அம்மாவும், நானும்... இதில் அப்பாவிற்கு நான் கவிதை எழுதிக் கொடுக்கிறேன்" என்றும்,

"இந்தக் கிறுக்கல் என்னம்மா" என்று கேட்க...

"இது அப்பாவுக்கு நான் எழுதிய கவிதை" என்று என்னிடம் தந்து என் மனதை நெகிழ வைத்து விட்டாள்.

ஒரு அப்பாவிற்கு இதை விட வேறு என்ன வேண்டும்..?

என் மகள் தரணிகாவின் "அப்பாவிற்கான கவிதையை" என்னைப் போன்ற அப்பாக்களும் படித்துப் பார்க்கவே இங்கே பதிவிடுகின்றேன்

- வல்வை அகலினியன்
          (20.10.2013)
ஆட்லறி பல்குழல் அனைத்தும்....
இவனது ஆறடிக்குள் அடங்கிவிடும்!!!

தமிழர்களின் பேராயுதமும் இவனே..!
தமிழர்களின் பாதுகாவலனும் இவனே..!!






விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா?


விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர்.

இன்று வரையும் புலிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என்று சொல்லிய பிறகும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லை!

சர்வதேசம் சிலவேளைகளில் மறந்து போய் அமைதியாக இருந்தாலும் தமிழர் விரோத சக்திகள் மீண்டும் "சிறுவர் போராளிகள்" விடயத்தினை இலங்கை அரசுடன் சேர்ந்து ஊதிப் பெருப்பித்து விடுகின்றனர்.

இவ்வாறான சில நஞ்சுத் தமிழர்களினால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சர்வதேச அரங்கினில் தடைகளும் உருவாகி எமக்கான ஒரு தேசம் உருவாகமல் முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை வந்து எமக்கான பேரவலங்களை உருவாக்கி பெரும் துன்பங்களாக முடிந்து போனது. இதை யாரும் மறுக்க முடியாது.

சிறுவர் போராளிகள் விடயம் சிலருக்கு சாதாரணமான விடயமாக இருக்கலாம், ஆனால், அதன் தாக்கங்கள் புற்று நோயைப் போல் பாரதூரமானது.


விடுதலைப்புலிகளை மனிதாபிமானம் அற்றவர்களாகவும், இரக்கம் இல்லாதவர்களாகவும் ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என சர்வதேச அளவில் முத்திரை குத்தி விட இப்படியான போலியான அர்த்தமற்ற, உண்மையற்ற குற்றச்சாட்டுக்கள் காரணங்களாக அமைந்து விடுகின்றன.

உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பில் "சிறுவர் போராளிகள்" இருந்தார்களா? இருந்தார்கள் என்று சொல்பவர்களிடம் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையின மக்கள் மீது அந்நாட்டு ஆளும் வர்க்கம் அதீதமான அழுத்தங்களை பல வடிவங்களில் பிரயோகிக்கும் போது... அந்த ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களில் இருந்துதான் ஆயுதப் புரட்சி வெடிக்கின்றது.


அந்த ஆயதப் புரட்சியானது தமக்குரிய உரிமைகளையும், நீதிகளையும் பெற்றுக் கொள்வதற்கே! அப்படிப்பட்ட அந்தப் புரட்சியாளர்களைத்தான் இன்று வரையும் சர்வதேச சமூகம் பயங்கரவாதிகள் எனவும், தீவிரவாதிகள் எனவும் குற்றம் சுமத்தி அடக்கி ஒடுக்கி வருகிறது! (இதில் சில இசுலாமிய தீவிரவாத அமைப்புக்களை சேர்த்துக் கொள்ள முடியாது) இதே போல்தான் ஈழத்தமிழர் போராட்டமும்.

ஒரு குறுகிய தேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்களை துன்புறுத்தி அவர்களின் உரிமைகளைப் பறித்து, உணர்வுகளை நசுக்கி ஒடுக்கி வருவதுடன் அந்த மக்கள் மீது பொருளாதாரத் தடைகள், மருத்துவத் தடைகள் என பல தடைகளை விதித்து... கடல், தரை, வான் பகுதியில் இருந்து தினமும் தாக்கி அழித்து பாரிய உயிர்ச்சேதங்களையும், உடமைச் சேதங்களையும் உருவாக்கி விடுகிறது சிங்கள அரசு.


அந்த யுத்த தேசத்தில்தான் பெற்றோர்களை இழந்த குழந்தைகளானவர்கள் தங்குமிட வசதி, உறங்குமிட வசதி, உணவு வசதி ஏதுமின்றி தவித்துப் போய் விடுகிறார்கள். தம்மைக் காப்பாற்றிக் கொள்ள தங்களது உறவினர்களுடன் போய் தங்கிக் கொள்ளலாமென்றால் அதுவும் சாத்தியமாகாது! காரணம், அந்த உறவினர்கள் கூட யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு தங்குமிட வசதிகள், உணவு வசதிகள் ஏதுமில்லாமல் இடப்பெயர்வுகளுடன் அடுத்த நிமிடம் என்னவாகுமோ எனத் திகிலோடு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருப்பவர்களாவார்கள்.

தம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள், எவ்வாறு அடுத்தவர்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்?


பாடசாலை போனால்... பாடசாலை அகதி முகாம்களாகவும் சில வேளை பாடசாலை யுத்தத்தினால் அழிவுற்றதாகவும், கோவில்கள் போனால் கடவுளே இல்லாமலும், கோவில்கள் சேதமடைந்தும் ஒரு சூனியநிலையினை உருவாக்கி மனதில் விரக்தியினை ஏற்படுத்தி விடும்.

நேரடி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளானவர்கள் பெற்றோர்களை இழந்து ஒரு இடத்தில் நின்று அழக்கூட முடியாத அவல நிலையில் அகதியாக... அனாதையாக உணவின்றி, உறையுளின்றி ஓடியோடி தம்மைத் தாக்கி... தமது பெற்றோர்களை அழித்த எதிரிகளை பழி தீர்க்க வேண்டும் என்ற குரோத எண்ணமானது அந்த வலி நிறைந்த குழந்தைப் பருவத்திலேயே உருவாகி விடுகிறது.


அந்த வேளையில் தமக்குப் பாதுகாப்பாகவும், தமது உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உறவினர்கள் மறுத்த வேளையிலும் கூட விடுதலைப் புலிகள் அமைப்பே அவர்களின் கண் முன் வந்து நின்றது.

இன்று பாரதூரமான குற்றச்சாட்டினை முன் வைக்கின்ற ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமானது (UNICEF) அந்தக் குழந்தைகள் அனாதரவான நிலையில் நின்ற போது திரும்பிக்கூடப் பார்த்தில்லை! இனவெறி பிடித்த இலங்கை அரசு கூட இரக்கம் காட்டாமல் அவர்களை மேலும் மேலும் தாக்கி அவர்களுக்குள் விரோதப் போக்கினையே உருவாக்கியது.

மேற்குறிப்பிட்ட அனாதரவான சிறுவர்கள்தான் தமது முக்கிய தேவையான உணவிற்கும், இருப்பிடத்திற்கும் வேறு சிறுவர்களோ தமது பெற்றோர்களை கொலை செய்த எதிரியை பழி தீர்க்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய முன் வந்தார்கள்.


இதில்தான் சிலர் முக்கியமாக ஒன்றினைக் கருத வேண்டும். திரைப்படங்களில் கதாநாயகன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்ற போது தனது பெற்றோரை வில்லன் கொலை செய்தால் அந்த நாயகன் பெரியவனாக வளர்ந்து அந்த வில்லனுடைய சாம்ராஜ்யத்தையே அழித்து விடுவான். இதைத்தான் திரைப்பட பார்வையாளர்களும், ரசிகர்களும் விரும்புகின்றார்கள்.

திரைப்படத்தில் வருகின்ற ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தையே இருக்கைகளின் நுனியில் இருந்து கதாநாயகன் கொலை செய்ய வேண்டும் என துடிக்கும் நீங்கள்... நிஜ வலிகளோடு தனது குடும்பம், தனது இருப்பிடம், தனது ஊர், தனது முகவரி அனைத்தையும் இழந்தவன், பல துயர வலிகளோடு தானும் போராளியாகி எதிரியை பழி வாங்கத் துடித்தால்... ஏன் அவர்கள் மட்டும் உங்கள் கண்களுக்கு எந்த வலிகளும் இல்லாத "சிறுவர் போராளியாகத் தெரிகின்றார்கள்??


உடனே நீங்கள் கேட்பீர்கள் "திரைப்படத்தில் கதாநாயகன் வளர்ந்துதானே பழி வாங்குகிறான்" என்று? உண்மைதான்! நீங்கள் நினைப்பது போல் ஒற்றைப் பாடலில் வளர்ந்து பெரியவனாக வளர இதுவொன்றும் திரைப்படம் இல்லை.

அவர்கள் விடுதலைப் புலிகளோடு இணையாவிட்டால் உணவின்றி பட்டினியாலும், உறவின்றி பாதுகாப்பில்லாமலும் இறந்தே போய் விடுவார்கள்.

இங்குதான் அனைவரும் ஒன்றினைக் கருத வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் போய் இணைந்தவுடன் அவர்களைப் போராட விடுதலைப் புலிகள் ஒருபோதும் அனுமதித்ததில்லை!


இதை உறுதிப்படுத்த வேண்டுமெனில் விடுதலைப் புலிகளின் வீரர்கள் இறந்ததற்கான மாவீரர்கள் பட்டியலில் பல ஆயிரம் மாவீரர்களின் விபரம் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான முழு விபரமும் இருக்கின்றது. அதில் பெயர் விபரம், பிறந்த ஊர், பிறந்த ஆண்டு என அனைத்து விபரமும் இருக்கின்றது. அந்த மாவீரர்கள் பட்டியலை சோதித்துப் பார்த்தால் தெரியும். அந்தப் பட்டியலில் சிறுவர் போராளிகள் இறந்ததற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இருக்காது!

விடுதலைப் புலிகள் அவர்களை தத்தெடுக்கா விட்டால் அந்த அனாதரவான குழந்தைகள் அந்த யுத்த சூழ்நிலையில் இறப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை!


விடுதலைப் புலிகளும் தத்தெடுத்தவுடன் அவர்களை ஒரு போதும் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதில்லை... அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையினைக் கருத்திற் கொண்டு அவர்களுக்காகவே 90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெற்றோர்களை இழந்த அனாதரவான குழந்தைகளுக்கென "செஞ்சோலை" எனும் சிறுவர் இல்லத்தினை உருவாக்கினார்கள். ஆரம்ப காலப்பகுதியில் சில மாதங்களேயான கைக் குழந்தைகளில் இருந்து ஆண், பெண் என இரு பாலர்களையும் உள்வாங்கினார்கள்.

உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமும் எந்தநேரமும் யுத்தம் நடக்கின்ற ஒரு தேசத்தில் பெற்றோர்களை இழந்து அனாதரவான குழந்தைகளை பாதுகாக்க காப்பகங்களை உருவாக்கியதில்லை!


கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் "போரினால் பெற்றோர்களை இழந்து தான் அனாதையாகியது போல் தமிழீழத்தில் எந்தக் குழந்தையும் அனாதையாகக் கூடாதெனவும், அவ்வாறான அந்தக் குழந்தைகள் அனைவரையும் தத்தெடுத்து நீங்கள்தான் அவர்கள் அனைவருக்கும் தாயாக வேண்டும்" எனவும் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட தலைவர் அவர்கள் 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் "காந்தரூபன் அறிவுச்சோலையான" ஆண் குழந்தைகளுக்கான ஒரு குழந்தைகள் காப்பகத்தை உருவாக்கினார்.

செஞ்சோலையில் வளர்ந்து வந்த ஆண் குழந்தைகள் அனைவரையும் காந்தரூபன் அறிவுச்சோலையில் இணைக்கப்பட்டு கல்வி போதிக்கப்பட்டது. செஞ்சோலை பெண் குழந்தைகளுக்காக மட்டுமென மாற்றப்பட்டது.


பெற்றோரிடமிருந்து இருந்து கல்வி பயின்ற மாணவர்களை விட செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலையில் கல்வி பயின்ற மாணவர்களே சிறந்த ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் சகல தொழில் நுட்பங்களையும் கற்று தலை சிறந்த மாணவர்களாக உயர்ந்தார்கள். இவையாவும் தமிழீழத்தில் வாழ்ந்த அனைத்து மக்களோடு புலம்பெயர் தமிழர்களும் நன்கறிவார்கள்.

18 வயது தாண்டிய படித்து முடித்த மாணவர்கள் மேற்படிப்புக்காக பல்கலைக்கழகம் சென்று படிக்கவும், வேறு வேலைகள் செய்யவும் அனுமதிக்கப்பட்டார்கள். வேறு சிலருக்கோ... திருமண வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் மகிழ்வுடன் வாழ்வதற்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு, தொழில்வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.


போராட விரும்பியவர்கள் மட்டுமே விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்வாங்கப்பட்டார்கள். அதுவும் அவர்களின் படிப்பின் தராதரத்தை வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் பணி நிமிர்த்தம் செய்யப்பட்டார்கள்.

செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலையோடு கண் தெரியாத... காது கேளாத... வாய் பேசாதவர்களுக்கென "இனிய வாழ்வு இல்லமும்", வேறாக "பாரதி சிறுவர் இல்லமும்", "செந்தளிர் இல்லமும்", "புனிதபூமி இளையோர் இல்லமும்" சகல வசதிகளோடும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள், கட்டாயப்படுத்தி சிறுவர்களை தமது அமைப்பில் இணைத்தார்கள் என்றால்.... எதற்கு காலத்தையும், நேரத்தையும் வீண் விரயமாக்கி எந்த நேரமும் யுத்தம் நடக்கின்ற ஒரு குறுகிய தேசத்தில் தேவையில்லாமல் பல குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கி பராமரிக்க வேண்டும்?


இவைகள் ஒரு புறமிருக்க.... பல இணையத் தளங்களிலும், முகநூல்களிலும் (Facebook) சில விஷமிகள், வரிப்புலி சீருடை அணிந்த குழந்தைகள், சிறுவர்கள் படத்தினை பதிவு செய்து... விடுதலைப்புலிகள் அமைப்பில் "சிறுவர் போராளிகள்" இருந்தார்கள் என முட்டாள்தனமான கருத்துக்களைப் பதித்துப் பரப்பி வருகிறார்கள்.

இதில் மிகவும் வேதனை என்னவென்றால், எனது மகள் துவாரகாவையும் சிறுவர் போராளியாக்கி விட்டார்கள்.


புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரேதேசத்திற்குள் வாழ்ந்த அனைத்துத் தமிழர்களும் விடுதலைப்புலிகளை கதாநாயகர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் வணங்கி வந்தார்கள். அத்துடன் தமது குழந்தைகளுக்கும் விடுதலைப் புலிகளின் சீருடைகளை அணிவித்து அழகு பார்த்தார்கள். தாயும் தந்தையும் போராளியாக இருந்தால், நிச்சயமாக தமது குழந்தைகளுக்கும் சீருடை அணிவித்தே நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். விடுதலைப் புலிகளின் சீருடையினை அணிவதனை வீரமாகவும், கௌரவமாகவும் கருதினார்கள்.


பாடசாலை நிகழ்வுகளில் வினோத உடைப் போட்டி வந்தால் அதிகமான குழந்தைகள் விடுதலைப் புலிகளின் சீருடையினை அணிந்தே நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களாக வேடமணிந்து முதல் பரிசினையும் பெற்றுக் கொண்டு விடுவார்கள்.

இதேபோல்தான் எனது மூத்த மகளுக்கு அவரது மூன்று வயதில் வரிப்புலிச் சீருடையினை அணிவித்து அழகு பார்த்தேன்... இப்போது அந்தப் படத்தினையும் பதிவிட்டு "சிறுவர் போராளி" என சொல்லி பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள்.

உண்மையிலேயே... மனசாட்சி இல்லாமலும், சிந்திக்கும் ஆற்றல் இல்லாமலும் இருப்பவர்களிடம் நான் சிலவற்றைக் கேட்க விரும்புகின்றேன்?

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சிலர் என் முகநூல் தனிச்செய்தியில் வந்து என் மகளின் படத்தினை வைத்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள் அவர்களிடமும் சில கேள்விகள்?


■ உங்கள் நாட்டுப் பாடசாலை நிகழ்வுகளில் வினோத உடைப் போட்டிகளில்... கடவுள்களாக, திருவள்ளுவராக, பாரதியாராக, ஔவையாராக, ஆசிரியர்களாக அல்லது வேறு தலைவர்களாக ஏன் உங்கள் நாட்டுக் காவல் துறையாக, தேசத்தையே பாதுகாக்கும் இராணுவ வீரர்களாக வேடம் போடச் சொன்னால்... நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளுக்கு கோவணத்தைக் கட்டி விட்டா பாடசாலை நிகழ்வுகளுக்கு அனுப்புவீர்கள்?? இல்லைத்தானே?

■ நீங்கள் மட்டும் இராணுவ வீரராக அல்லது வேறு எப்படியும் உங்கள் குழந்தைகளுக்கு உடை அணிவித்து வினோத உடைப் போட்டிகளுக்கு அனுப்பலாம்... ஆனால், ஈழத்தில் வாழும் தமிழர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் நாட்டு இராணுவ உடை அணிந்து அனுப்பினால்... உங்கள் குருட்டுக் கண்களுக்கு அவர்கள் சிறுவர் போராளிகளா?


உங்கள் ஊர் சிவகாசிப் படங்களில் (Poster) அதிகமான படங்களில் குழந்தைகள் இராணுவ வீரனாக, மருத்துவராக வேறு பல தலைவர்களாக காட்சி அளிப்பார்கள். (ஈழத்திலும் சிவகாசி மாதிரி ஓர் ஊர் இருந்திருந்தால் இன்னும் பெரிய படங்களாக வெளி வந்திருக்கும். அவ்வாறானதொரு ஊர் இல்லாமல் இருந்தமையால்தான்... இது போன்ற சிறிய படங்கள் வந்திருக்கின்றது.) சிவகாசி படங்களில் வருகின்ற இந்தியா இராணுவ சீருடை அணிந்த குழந்தைகளைப் பார்த்து விட்டு "அட இந்திய இராணுவத்தில் குழந்தைகளும் இருக்கின்றார்கள்" என்று எந்தவொரு ஈழத்தமிழர்ளும், தமிழ் உணர்வாளர்களும் சொல்லுவார்களா?

■ உலகத்தில் எந்த நாட்டிலாவது துப்பாக்கியை விட சிறியதாக இருக்கும் மூன்று வயதுக் குழந்தை துப்பாக்கி தூக்கி போராடிய சரித்திரம் உண்டா? மூளையில்லாத விசக்கிருமிகள் சொன்னதைக் கேட்டு உங்களை, நீங்களே முட்டாள்களாக ஆக்காதீர்கள்!!


■ உங்கள் நாட்டில் ஈழத்தில் நடந்த யுத்தம் மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதனால், நீங்கள் விமர்சனம் செய்கின்றீர்கள். உங்கள் நாட்டிலும் முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு சிறுபான்மை இனத்தை கடுமையான யுத்தத்தினால் நசுக்கி எல்லா வளங்களையும் முடக்கி தாய், தந்தை உறவுகளை கொலை செய்து குழந்தைகளை அனாதையாக்கினால்... உங்களால் அக் குழந்தைகளை காப்பாற்றியிருக்க முடியுமா?

தமிழீழத்தில் இறுதி யுத்தம் நடப்பதற்கு முன்னரான காலப்பகுதியில் அங்கு அனாதைக் குழந்தைகளே கிடையாது!

■ போரினிலே பெற்றோரை இழந்த சுமார் நான்காயிரம் குழந்தைகளுக்கு தலைவர் பிரபாகரன் அவர்களே தாயும் தந்தையுமானார். அவர் அந்தக் குழந்தைகளுடன் இருக்கின்ற சுமார் ஆயிரக்கணக்கான படங்கள் இணையங்களில் இருக்கின்றது. அதைவிட்டு அடுத்தவர் குழந்தைகளின் வினோத உடைப் போட்டிக்கு எடுத்துக் கொண்ட ஒரு சில படங்கள்தான் உங்கள் கண்களுக்கு தெரிகின்றதா?


■ சிறுவர் போராளிகளாக இருந்திருந்தால் எதற்கு காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை, இனியவாழ்வு இல்லம், செந்தளிர் இல்லம், பாரதி சிறுவர் இல்லம், புனிதபூமி இளையோர் இல்லம் போன்றவைகளை உருவாக்க வேண்டும்? இவைகள் தேவையற்ற ஒன்றுதானே? இக்காப்பகங்களை விடுதலைப்புலிகள் உருவாக்கி குழந்தைகளை பராமரித்து வந்தது உலகிற்கே தெரியும். ஏன், இது சம்பந்தமான பதிவுகள் கூட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தில் (UNICEF) இருக்கின்றதே! இந்தக் காப்பகங்களால்தான் ஈழத்துக் குழந்தைகள் எவரும் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் அனாதையாகவில்லை!

■ உங்கள் நாட்டில் ஈழத்தில் ஏற்பட்ட போர் போன்று ஒன்று ஏற்பட்டிருந்தால்... இவ்வாறான அனாதைக் குழந்தைகளை நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? போர் இல்லாமல் இருந்தே... இப்பொழுதும் பேரூந்து நிலையங்களிலும், கோவில்களிலும் வேறு இடங்களிலும் குழந்தைகள் பிச்சை எடுத்து பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள். வேறு பல குழந்தைத் தொழிலாளர்களை தேனீர்க்கடைகளில் அடிமைகளாக வேலை செய்வதையும் பார்க்கலாம்!


■ நீங்கள் பன்னிரண்டு வயது சிறுவர்களாக இருக்கும் போது, உங்கள் வீடுகளில் ஒரே ஒரு திருடன் புகுந்து உங்கள் கண்முன்னாலேயே உங்கள் குடும்பத்து அங்கத்தவர்களை துன்புறுத்தி, பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினால்... அங்கே அந்தக் கோரமான கேவலமான காட்சிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பீர்களா? அல்லது எதிர்க்கத் துணிவீர்களா?

அங்கே பத்து வயதிற்குட்பட்ட பாலகனாக இருந்தாலும் அந்தக் காமூகத் திருடனை, அந்தப் பாலகனானவன் கொலை செய்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் எந்தத் தாயும் விரும்புவாள்! இது அவரவர்களுக்கு வந்தால்தான் புரியும்! உங்களைப் போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது?


1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பல ஊர்களுக்குள் புகுந்த காட்டுமிராண்டி சிங்களப் படைகள், பல தமிழ் குடும்பங்களை கைது செய்து குழந்தைகளுக்கு முன்னாலேயே தந்தை, ஆண் சகோதரர்களைக் கட்டிப் போட்டு... தாய், சகோதரிகளை நிர்வாணமாக்கி கூட்டம் கூட்டங்களாகக் கதறக் கதற கற்பழித்துக் கொலை செய்து விட்டு பின் கட்டி வைக்கப்பட உறவுகளையும் கொலை செய்து விட்டுச் சென்று விடுவார்கள். அங்கிருந்து பழி வாங்க வேண்டும் என்ற வெறியோடு வரும் குழந்தைகளைத்தான்... விடுதலைப்புலிகள் தமது அன்புக் கரங்களால் அணைத்து செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற காப்பகங்கள் மூலம் அரவணைத்தார்கள்.

■ உங்கள் தமிழ்த்திரைப்படங்களில் உங்கள் நட்சத்திரத் தலைவர்கள் சிறுவர்களாக எது செய்தாலும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள்... உங்கள் இதயத்தோடு தொங்கிக் கொண்டிருக்கும் தொப்புள் கொடி உறவுகளின் நீதியான, நியாயமான விடுதலைப் போராட்டத்தினை இவ்வாறுதான் விமர்சித்து அறுத்து விடுவீர்களா?

"விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள்" என வாய் கிழிய கத்தி ஓலமிடும் ஓநாய்களே..!


2009 ஆம் ஆண்டின் பின் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் பெற்றோர், உறவினர்களை இழந்த பல ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக, அடிமைகளாக தெருத்தெருவாக பிச்சை எடுத்து அலைகிறார்கள்! பல சிறுமிகள் துன்புறுத்தி கற்பழிக்கப்பட்டு கட்டாய விபச்சாரிகளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள்! இன்றும் கூட வவுனியா தெருக்களில் பல பெண் குழந்தைகள் விபச்சாரிகளாக எதிர்காலத்தினை தொலைத்து இருளோடு உறவுகளின்றி, முகவரி இழந்து தெருத் தெருவாக அலைகிறார்கள்! இக் குழந்தைகளை ஏன் உங்களால் காப்பாற்ற முடியவில்லை?

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இக் குழந்தைகள் அனாதைகளாகி கண்ணீர் சிந்தியிருக்க மாட்டார்கள்! சிறுமிகள் கசங்கி இரத்தம் சிந்தியிருக்க மாட்டார்கள்! செஞ்சோலையில் அழகிய வண்ணப் பூக்களாக பூத்திருப்பார்கள்! இன்று இக்குழந்தைகள் பூப்பதற்கு செஞ்சோலையும் இல்லை! கூடுகட்டி வாழ்வதற்கு காந்தரூபன் அறிவுச் சோலையும் இல்லை!


சிறுவர் போராளிகளை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் என்பது முழுத்தவறு! சிறுவர் போராளிகள் இலங்கை அரசின் இனவெறி பிடித்த யுத்தத்தினால் உருவாக்கப்பட்டார்கள்.

● பெற்றோரைக் கொலை செய்து தங்குமிடத்தை அடியோடு அழித்து, ஊரை விட்டுத் துரத்தி, முகவரிகளே இல்லாமல் செய்து குரோத மனப்பாங்கினை உருவாக்கி பல ஆறாத வலிகளைக் கொடுத்து அவர்களையும் போராளியாகி போராடத் தூண்டியமைக்கான முதல் குற்றவாளி... இனவெறி பிடித்த இலங்கை அரசே!

● அதே குழந்தைகள் உணவில்லாமல் அலைந்து உடையுடுத்தி, உறையுள் கொள்ள ஏதும் இல்லாமல் உள்ளத்து வலிகளோடு... உடல் காயங்களோடு தெருத்தெருவாக அலையும் போது கண்டு கொள்ளாமல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமே... இரண்டாவது குற்றவாளி!

● ஆயுதங்கள் வழங்கியது மட்டுமல்ல போரினையும் ஊக்குவித்து மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைகட்டி நின்ற சர்வதேசமே... முன்றாவது குற்றவாளி!

இறுதியாக...

● இன்றும் கூட அதே குழந்தைகள் யாருமே இல்லாமல் ஆதரவற்று அனாதைகளாக அலையும் போதும்... விபச்சாரிகளாக்கப்பட்டு துன்பறுத்தப்படுவதையும் செய்திகள் ஊடாகக் கண்டும் காணாமல் இருந்து வாய்கூசாமல்... மனச்சாட்சியே இல்லாமல் விமர்சிக்கும் நீங்கள் நான்காவது குற்றவாளியல்ல..! மிகவும் மோசமான கேவலங்கெட்ட ஈனப்பிறவிகள்! 


புலிகள் விதைகளை பூக்களாக்கினார்கள்! நீங்கள் அந்தப் பூக்களின் இதழ்களை புடுங்கி கருக்கி மண்ணிற்குள் புதைக்கின்றீர்கள்..!!!

பூக்களை மறுபடியும் பூக்கவிடுங்கள்! அவர்கள் அழகழகான பூக்களாகப் பூத்து தேசத்தை அலங்கரித்து, அவர்களால் அழகிய தேசம் உருவாகட்டும்!

- வல்வை அகலினியன்
                (21.03.214)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:

1, தமிழ்வின் இணையம்
2, பதிவு இணையம்
3, வெளிச்சவீடு இணையம்
4, விவசாயி இணையம்
5, www.asrilanka.com
6, தமிழர்குரல் இணையம்
7, தினப்புயல் இணையம்