சில கேவலமான பிறவிகளால்... விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், விடுதலைப் புலிகளின் புனித சின்னத்திற்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது!!!

சில கேவலமான பிறவிகளால்... விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், விடுதலைப் புலிகளின் புனித சின்னத்திற்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது!!!


தற்போது, கேள்வி கேட்க யாருமே இல்லை என்றவுடன் பல ஈனப்பிறவிகள் சமூக வலைத்தளங்களில் தாம்தான் "விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம்" என்ற ரீதியில் அறிக்கைகள் விட்டு விடுதலைப் புலிகள் அமைப்பையும், விடுதலைப் புலிகள் சின்னத்தையும் கேவலப்படுத்தி வருகிறார்கள்.

சரி, அறிக்கைகள் விடுவது என்றாலும் நல்ல விடயங்களோடு கருத்துக்கள் பதிவு செய்து வெளியிடுவதென்பது சிறப்பே... ஆனாலும், உணர்வுள்ள உண்மைத் தமிழர்கள் எவரும் விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி போலி அறிக்கைகள் வெளியிட்டு மக்களைக் குழப்புவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அவ்வாறான போலி அறிக்கைகள் வெளியிடுபவர்களை "துரோகத்தின் எச்சங்களாகவே" தமிழர்கள் கருதுவார்கள்.

இங்கே நான் கீழே இணைத்திருக்கும் படத்தை அமல் என்பவரின் முகநூலில் இருந்து எடுத்தேன். அதில் விடுதலைப் புலிகளின் பெயரையும், சின்னத்தையும் சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி தமிழையும் கொலை செய்துள்ளனர்.


அதில் "சிறுமிகளையும்" என்பதற்கு "சிருமிகளையும்" என்றும்...

பலாத்காரம் என்பதற்கு "பலச்காரம்" என்றும்... தமிழ் மொழியை கொலை செய்துள்ளனர். போதாத குறைக்கு விடுதலைப்புலிகளின் பெயர் வேறு..!!

தமிழரின் வீரம் செறிந்த வரலாறுகளையும், விழுமியங்களையும், பெருமைகளையும் உலகறியச் செய்த விடுதலைப் புலிகளின் பெயரில் அநாகரீகமான நடைமுறையில் எழுத்துத் தவறுகளோடு இவ்வாறு அறிக்கைகள் வெளியிடுவதால்... அது உலகில் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் தலைகுனிய வைத்து கேவலப்படுத்தும் செயலாகும்!!

இவ்வாறான அறிவற்றத்தனமான அறிக்கைகள் விடுபவர்களை இனம் கண்டு அனைவரும் புறக்கணிக்க வேண்டும்... காரணம், இவர்களால் தமிழனத்திற்கே மிகப் பெரிய ஆபத்து உருவாகும் சூழல் உள்ளது!

தற்போது... முகநூல்களில் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால், உடனே அவருக்கு "துரோகிப்" பட்டம் கொடுத்து இவ்வாறான அறிக்கைகள் ஊடாக பதிவிட்டு விமர்சிப்பார்கள்.  போதாத குறைக்கு அவரது பதிவின் உண்மை நிலையை ஆராயாமல், ஆழமாக சிந்திக்காமலும், தூரநோக்கின்றியும் துரோகிப் பட்டம் கொடுக்கப்பட்டவருக்கு கேவலமான முறையில் பின்னூட்டம் பதிவு செய்வதற்கு ஒரு முட்டாள் கூட்டமும் கூடவே அலையும்.!!

தற்போது ஒரு கணணி... ஒரு கைபேசி... ஒரு முகநூல் கணக்கு இருந்தால் போதும் உடனே ஒருவருக்கு "துரோகிப் பட்டம்" கொடுக்க முடியும்!!

உண்மையிலேயே ஒருவர் துரோகம் செய்தால், அவர் செய்த துரோகத்தின் செயற்பாடுகளை ஆதாரபூர்வமாக வெளியிட்டு செய்திகளாக பதிவிட வேண்டும். அதுவும் நாட்டின் நலன்களுக்கு எதிராக செயற்படுபவர்களையே அனைவரும் பொதுவில் "தேசத் துரோகி" என்பார்கள். அதுவும், அவ்வாறானவர்களை ஒரு அரசாங்கம் அல்லது மக்களினால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புக்கள் போன்றவைகள்தான் ஆதாரங்களுடன் துரோகத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக வெளியிடுவார்கள்.

ஆனால், தற்போதோ இந்த முகநூல்களில் ஒருவரை ஒருவருக்கு தனிப்பட்ட ரீதியாக பிடிக்கவில்லை என்றால் உடனே அவர்கள் கொடுக்கும் பட்டம், "துரோகிப் பட்டமே"!!! அதன் உண்மை நிலையை ஆழமான முறையில் ஆராயாமல் அதற்கு பின்னூட்டம் பதிவிடும் சிலர் மூடர்கள் கூட்டமும் ஒருபக்கம்!!

இவ்வாறு இந்த முகநூல்களில் உலாவி வரும் சில கேவலமான ஈனப்பிறவிகளால் உண்மையான தமிழ் உணர்வாளர்கள் பாதிப்படைவதோடு அந்த உணர்வாளர்கள் முன்னெடுத்துச் செல்லும் ஆரோக்கியமான நல்ல விடயங்களும் தடைபட்டுப் போகிறது. அவ்வாறு தடைப்படுவதால் தமிழினத்திற்கே தாழ்வும், அழிவு நிலையும் ஏற்படும் அபாயம் உள்ளதை இந்த முகநூல் போலிகள் ஒருபோதும் அறிவதில்லை!!!

உலகில் முகநூல் பயன்படுத்தும் பல மொழி மக்களில் தமிழன் மட்டுமே அடுத்தவர்களுக்கு முகநூல்களில் "துரோகிப் பட்டம்" கொடுத்து சண்டையிட்டு  உலாவி கேவலப்பட்டு வருகிறான்!!!

இவ்வாறான செயல்களை நிறுத்தாத வரையும் தமிழனுக்குத் தாழ்வு நிலையே!!!

- வல்வை அகலினியன்
              (11.10.2015)

0 comments:

Post a Comment