தனது வரி தரித்த தொப்பியை குழந்தைக்கு அணிவித்து அழகு பார்த்து விளையாடும் தேசியத் தலைவர் அவர்கள்


தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குழந்தைகள் மீது அளவு கடந்த அன்பினைக் கொண்டவர். தன் குழந்தைகள் என்பதை விட சகல குழந்தைகள் மீதும் அளவு கடந்த பாசத்தினைக் கொண்டவர்.

தனக்கு நேரங்கள் கிடைக்கின்ற போதெல்லாம் செஞ்சோலை மற்றும்  காந்தரூபன் அறிவுச்சோலை சென்று  குழந்தைகளைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்த தலைவர் அவர்கள், மேற்குறிப்பிட்ட இல்லங்களுக்குச் செல்கின்ற பல வேளைகளில் குழந்தையாகவே மாறி அவர்களுடனேயே அமர்ந்து பல கதை பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருப்பார். இதை அருகிலுள்ள தளபதிகளும் போராளிகளும் பார்த்து ரசித்து மகிழ்வதுமுண்டு.

பல சிறந்த நற்குணங்களை உடைய தேசியத்  தலைவர் அவர்கள் மிகுந்த  இரக்க சுபாவம் உடையவர் என்பது ஈழத்தில் அவரது ஆட்சியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறிந்ததே.

தலைவர் அவர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி விளையாடுகின்ற பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும், இணையங்களிலும் எண்ணற்றுக் கிடக்கின்றன. அதுமட்டுமின்றி ஈழத்தில் வாழ்ந்த பலரிடமும் இன்னும் வெளிவராத புகைப்படங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

ஆனாலும், இக் குழந்தையுடன் தேசியத் தலைவர் அவர்கள் ஆரத்தழுவி புன்னகைத்து மனமகிழ்ந்து விளையாடுகின்ற இப் புகைப்படமானது மிகவும் அரிய அழகு நிறைந்த  புகைப்படமாகும்.

* குறிப்பு: மேற்குறிப்பிட்ட  குழந்தையின் பெயர் குயிலன். தற்போது 15 வயதிருக்கும்.

- வல்வை அகலினியன்
               (22.06.2015)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:

0 comments:

Post a Comment