விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலங்களில் பேருதவி புரிந்தது தமிழகம்தான்.!!

விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலங்களில் பேருதவி புரிந்தது தமிழகம்தான்.!!

ஆனால், அதுவும் உணவு... தங்கும் வசதி... பயிற்சி எடுக்கத் தேவையான இடம்... மற்றும் பேராதரவு! 

இப்படி பல....
எம்ஜிஆர் அவர்களுடன் தேசியத் தலைவர் அவர்கள் அருகில் கேணல் சங்கர் அண்ணா

ஆனாலும், எம்ஜிஆர் வழங்கிய கோடிக்கணக்கான பணம், அப்போது ஆயுதம் வாங்க பெரும் உதவியாக இருந்தது!

இதை யாரும் மறுப்பதற்கில்லை.!!

இதே போல்...

வைகோ அண்ணா. ..
பழ நெடுமாறன் ஐயா..
கொளத்தூர் மணி அண்ணா...
கோவை இராமகிருட்டிணன்...
புலமைப் பித்தன்...
சேலம் சின்னவர்...

அதைவிட தமிழீழ தேசியக் கொடியை வரைந்த நடராசா அண்ணா...

தமிழீழ தேசியக்கொடி வரைந்த தமிழக ஓவியர் நடராசா அவர்கள் 
இந்த வரிசையில் இன்னும் ஏராளம்... ஏராளமானவர்கள்...

அப்படி ஒரு பேருதவி செய்த உணர்வாளர்தான் திரு. ஆறுச்சாமி அவர்களும்.

இதை எந்தவொரு ஈழத்தமிழனும் மறக்க மாட்டான்...

தமிழக அரசே கண்டு கொள்ளாமல் விட்ட தியாகப் பேரொளி முத்துக்குமாரை... விடுதலைப் புலிகள் தமது மாவீரர் பட்டியலில் இணைத்து கௌரவப்படுத்தியதால்... முத்துக்குமார் புனிதம் அடைந்ததோடு தமிழீழத்தின் புதல்வனாகி... உலகத் தமிழர் இதயங்களில் பதிவாகிப் போனான்!!

இவ்வாறாக உதவி செய்தவர்களை (உதவிட்டவர்கள் சொல்லாமலே) உச்சத்தில் கௌரவப்படுத்தி பார்ப்பதில் ஈழத்தமிழர் ஒரு போதும் மறப்பதில்லை! !!

ஆறுச்சாமி அவர்கள்
உதாரணமாக...

கோடிகளை அள்ளிக் கொடுத்த எம்ஜிஆர் அவர்களின் உருவச்சிலையை தமிழீழ தேசியத் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் பல தடைகளுக்கு மத்தியில் தலைவரது வீட்டிற்கு அருகாமையிலேயே நிறுவி அழகு பார்த்தார்கள். 

இவ்வாறு இருக்கையில்... 

சில தமிழகப் பெரியவர்கள்... ஈழத்தமிழர்களை நன்றி மறந்த கேவலங்கெட்டவர்கள் எனச் சொல்லுவது கண்டிக்கத்தக்கது! !!

இந்திய இராணுவம் இலங்கையில் அட்டூழியம் புரிகையிலே... அந்த இறுக்கமான காலங்களில் எவனுக்கும் பயப்படாமல் படகேறி ஈழம் சென்ற திரு. வை. கோபாலசாமி அவர்களோ...

இதுவரை "தான் அது செய்தேன்" "இது செய்தேன்" என தான் செய்த பேருதவிகளை சொல்லிக் காட்டி விளம்பரப் படுத்தியதில்லை!!!

அதனால்தான் இன்று வரையும் ஈழத் தமிழர்கள் வைகோ அவர்களை எதிர்த்ததில்லை!! பெரும் மரியாதையுடனேயே இன்று வரையும் தங்களுக்குள் வைத்துள்ளார்கள்.

வைகோ அவர்களும் தேசியத் தலைவர் அவர்களும்
அது போலவே இன்னும் பலர் தாய்த் தமிழகத்தில் இருக்கிறார்கள்...

இவ்வாறெல்லாம் இந்தத் தலைவர்கள் இருக்கும் போது...

சிலர் உதவிகளைப் புரிந்து விட்டு கொக்கரிப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை! !!

விடுதலைப் புலிகளுக்கு எந்தவகையான உதவி யார் செய்தாலும்...

ஆயுத ரீதியான மற்றும் இராணுவப் பயிற்சி முறை உதவிகளை ஒரு சாதாரண பொதுமகனிடம் கற்றுக் கொண்டதில்லை!!!

அதை முறையின்படி இராணுவ ரீதியாகவே கற்றுக் கொண்டனர்... என்பது பலர் அறிந்த வரலாறு!!

உதாரணமாக... விடுதலைப் புலிகள் மதித்த தமிழகத் தலைவர்களை அழைத்து தலைவர் பிரபாகரன் அவர்களே நேரடியாக சூட்டுப் பயிற்சி வழங்கிய வரலாறு உலகறியும்!!! 

அவ்வாறு இருக்கையில்....
சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு
"1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 300 விடுதலைப் புலி வீரர்களுக்கு கோயமுத்தூரில் திரு. ஆறுச்சாமி அவர்கள் பயிற்சி கொடுத்தார்" என தவறான வரலாறை திணித்துக் கொக்கரித்தால்.... 

எந்தத் தமிழன்தான் மூடிட்டு இருப்பான்???? 

அவர் விடுதலைப் புலிளுக்காக பல தடவை சிறை சென்றது... அவர் செய்த அளப்பரிய உதவிகளை எப்படி நாம் பார்ப்பது???

போதாத குறைக்கு. .. RPG எறிகணைகள் தயாரித்து அனுப்பினார் என்பது எவ்வளவு வேடிக்கையானது??

RPG எறிகணை என்றால் என்ன தெரியுமா??? அதன் தொழிற்பாடு என்ன தெரியுமா???

இதுவரைக்கும் சொல்லாமல்... தற்போது கேட்பதற்கு யாருமே இல்லை என்றவுடன் சும்மா வாய்க்கு வந்தமாதிரி எதுவும் சொல்லக்கூடாது!!!

இதை எந்தவொரு தமிழ் உணர்வாளனும் நம்பப் போவதுமில்லை!!!

சரி.... இதையெல்லாம் விடுவோம்....

தமிழகத்தில் கோயமுத்தூரில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம் எங்கே இருந்தது??? கொஞ்சம் சொல்ல முடியுமா???




இதோ... தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம் விபரங்கள்....

1 வது மற்றும் 2 வது பயிற்சி முகாம் - உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தியா ராணுவத்தால் லெப் கேணல் பொன்னம்மான் அண்ணா தலைமையில் நடந்தது.

3 வது பயிற்சி முகாம் - கொளத்தூரில் மாத்தையா மற்றும் புலேந்தி அம்மன் தலைமையில் நடந்தது.

4 வது பயிற்சி முகாம் - திண்டுக்கல்லில் புலேந்தி அம்மான் மற்றும் மாத்தையா தலைமையில் நடந்தது. பயிற்சி கொடுத்தவர் மேஜர் செல்வராசா மாஸ்டர். 

5 வது பயிற்சி முகாம் - மதுரையில் லெப் கேணல் இராதா அண்ணாவால் பயிற்சி வழங்கப்பட்டது. (இராதா அண்ணா முதலாவது பயிற்சி முகாமில் இந்தியா இராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்)

6 வது பயிற்சி முகாம் - கொளத்தூரில் லுகாஸ் அம்மானால் (இவர் நடேசன் அண்ணாவின் தம்பி) வழங்கப்பட்டது. இவரும் முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர். இந்த பயிற்சி முகாமிற்கு இரண்டாவது பொறுப்பு மேனன் அண்ணா. 

7 வது பயிற்சி முகாம் - திண்டுக்கல்லில் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்தப் பெண்கள் பயிற்சி முகாமிற்கு பாதிக்காலங்கள் வரை மேஜர் செல்வராசா மாஸ்டரும். மீதிக் காலங்கள் வரை மேஜர் பாரதி அண்ணாவும் பயிற்சி வழங்கினார். இந்த பயிற்சி முகாமில் இரண்டாவது பொறுப்பாளராக இந்திரன் மாஸ்டர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்திரன் மாஸ்டர் 4 வது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர்)

8 வது பயிற்சி முகாம் எண்ணின் அடிப்படையில் ஆரம்பிக்கப்படவில்லை!!!

9 வது பயிற்சி முகாம் - மதுரையில் அற்ரி (Atri) அண்ணாவால் பயிற்சி வழங்கப்பட்டது. அற்ரி அண்ணா 5 வது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர். தற்போது உயிருடன் உள்ளார். 

10 வது பயிற்சி முகாம் - கொளத்தூரில் கப்டன் ரோய் அண்ணாவால் பயிற்சி வழங்கப்பட்டது. இவர் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர். 

கப்டன் ரோய் அண்ணா தமிழீழத்தில் இருந்த வேளை பலாலியில் காயமடைந்து தமிழகத்திற்கு சிகிச்சைக்காக வந்த வேளை வீரமரணமடைந்த அவரது உடலை இவர் பயிற்சி கொடுத்த முகாமான 10 வது பயிற்சி முகாமிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 

9 வது 10 வது பயிற்சி முகாம் தமிழகத்தில் நடைபெற்று வந்த காலத்தில் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழத்தில் அரியாலை மற்றும் சாவகச்சேரி போன்ற இடங்களில் கேணல் கிட்டண்ணா அவர்களால் புதிய போராளிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது..

அந்த வேளைகளில் வன்னியிலும் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

பழ நெடுமாறன் ஐயா அவர்களுடன் தேசியத் தலைவர் அவர்கள்

மேற்குறிப்பிட்ட பயிற்சி முகாம்களில் 3, 6, 10 போன்ற பயிற்சி முகாம்கள் கொளத்தூர் மணி அண்ணாவின் தோட்டக் காணிகள் ஆகும்... 

அந்தக் காலங்களில் நூறு பேர் பயிற்சி எடுப்பதே பெரிய விடயம். .. 

அவ்வாறு இருக்கையில் "1980 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் 300 விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுத்தவர் திரு. ஆறுச்சாமி" என்று சொன்னால்... எந்த உணர்வுள்ள தமிழனும் நம்புவானா???

இதைக் கேட்டால்... ஆறுச்சாமியின் வரலாறு தெரியாமல் பேச வராதே என்கிறார்கள். .. சில முத்திப் போன மூடர்கள்!!!

முதலில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் பற்றி தெரிந்து விட்டு வந்து பேசுங்கள். 

மாத்தையாவும் பயிற்சி கொடுத்தார் என்பதற்காக... அவர் செய்த துரோகத்தை பொறுத்து கொண்டு அவரை தலையில் தூக்கி வைத்து ஆட முடியாது! !! அவரது துரோகத்திற்கு தண்டிக்கப்பட்டார்.

ஆறுச்சாமி அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பேருதவி புரிந்தார் என்பதற்காக.... அவர் "300 விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுத்தார்.... RPG எறிகணை தயாரித்துக் கொடுத்தார்" என்பதை எந்தவொரு உணர்வுள்ள தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்!!!

உங்கள் கேவலங்கெட்ட தற்பெருமைகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.!!! 

விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களின் வரலாறுகள் பல தளங்களிலும் பழைய சில நூல்களிலும்... தேசியத் தலைவர் அவர்களது பேச்சுக் காணொளிகளிலும் இருக்கிறது!!!

தமிழீழ தேசியக் கொடியை வரைந்த ஓவியர் நடராசா அவர்கள் தேசியத் தலைவருடன்

ஈழத்தமிழர்கள் உதவி மறந்த நன்றி கெட்டவர்கள் அல்லர். ... அவர்கள் உங்களின் பேருதவிகளை வரலாறுகளாக பதிந்து வைத்துள்ளார்கள்..!!

2009 வரை நடிகைகளின் தொப்புள்களில் பம்பரம் விட்டு விட்டு.... நடிகர்களின் பின்னால் அலைந்து விட்டு.... மட்டைப் பந்தாட்டத்திற்குள் (கிரிக்கெட்) சுருண்டு போய்க் கிடந்து... 

உங்கள் இதயத்தோடு தொங்கிக் கொண்டிருந்த தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை இலட்சம் உறவுகள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்து விட்டு... 

எல்லாம் முடிந்த பிற்பாடு... உலகில் வரலாறாய் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் வரலாறுகளை படித்து விட்டு அவர்களுக்கே போராட்ட வரலாறுகளைக் கற்பிப்பது உங்களுக்கே வேடிக்கையாகவும்... கேவலமாகவும் இல்லையா???

இன்னும் நீங்கள் திரைப்படங்களில் வருவது போல் வீர வசனங்களையும்... தற்பெருமைகளையும் பேசிக் கொண்டு இருப்பதால்தான்...

கன்னடனும்...
தெலுங்கனும்...
மலையாளனும்...

ஏன், கடல் ஏறி வந்து சிங்களனும் அடித்துக் கொண்டே வருகிறான்!!!

இன்னும் கூட உங்களை... உங்களால் ஆள முடியவில்லை! !!

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த படுகொலையை மேடைகள் போட்டு திரு. சீமான் அவர்கள் முழங்கியதால்தான்.... இன்றுவரையும் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் ஈழத்திற்கான ஆதரவு பெருகியது!!!

சுவரொட்டிகளிலும்.... அழைப்பிதழ்களிலும்.... ஆடை அணிகலன்களிலும்... தமிழக இளைஞர்களின் நெஞ்சங்களிலும் தமிழினத்தின் தேசியத் தலைவராக மேதகு பிரபாகரன் அவர்களே வாழ்ந்து வருகிறார்...

சீமான் அவர்கள் வரவில்லை என்றால்.... தமிழர்களின் வீர வரலாறு தமிழகத்தில் புரட்டிப் பார்க்கப்படாமல் ஏற்கனவே 2009 ஆம் ஆண்டின் முன் இருந்தது போல் இருந்திருக்கும்!!

சீமான் அவர்கள் பற்றி இங்கே பதிவதால்... எனக்கு அரசியல் சாயம் பூசி ஆதாயம் தேட வேண்டாம்! !! இந்தப் பதிவின் ஆரம்பத்தில் திரு. வைகோ அண்ணாவையும்... பெருமைபட கூறியிருப்பேன் என்பதையும் சற்றுக் கவனிக்கவும்.

சாதியங்களையும்...
மதங்களையும்....

கேடு கெட்ட அரசியலையும் தூக்கி வீசி விட்டு அனைவரும் தமிழர்களாக இணையுங்கள்!

வல்வை அகலினியன்
             (05.03.2015)

0 comments:

Post a Comment