பாடசாலை நாட்கள்..!

பாடசாலை நாட்கள்..!



வாழ்நாளில்
திரும்பவும் கிடைக்காத
இனிய நினைவுகள்!
அவை இளம்பருவத்து
இனிய காலங்கள்!
நினைக்கும் போதெல்லாம்
இதயத்தில் இனிமையைத் தரும்
பள்ளித் தோழமைகளின்
பழகிய நாட்கள்.!


சிலருக்கு...

நினைவில் வந்தவுடனே
மனசெல்லாம்
பஞ்சாய்ப் பறக்கும்!
பழகிய உறவுகள் எல்லாம்
நெஞ்சில் வந்து கனக்கும்!
பருவவயது மாற்றங்கள் எல்லாம்
இதயத்தில் தங்கி இனிக்கும்!


ஒரு சிலருக்கோ...

சிறுவயது நினைவெல்லாம்
சிலிர்த்தெழுந்து சுற்றும்!
அன்னைபோல்...
மடிமீது வைத்து தாலாட்டும்!
இனிமைப் பாலூட்டும்!


வேறு சிலருக்கோ....

மனநிலையை வீரியமாக்கும்!
பழைய நினைவுகளை
இன்னும் விரிவாக்கும்!
அவ்வாறே...
மனக்கதவு திறக்கும்..!
அப்படியே...
உங்கள் மனசு போய்
பாடசாலையில் வீழ்ந்து - உங்கள்
கவலைகளெல்லாம் மறக்கும்.!!

- வல்வை அகலினியன்.



0 comments:

Post a Comment