அப்பாவிற்காக ஒரு கவிதை..!

அப்பாவிற்காக ஒரு கவிதை..!


நான் சும்மா ஒரு கவிதை எழுதிக் கொண்டிருந்தேன், அந்த வேளை என் மகள் தரணிகா என்னிடம் வந்து,

"என்னப்பா செய்றிங்க" எனக் கேட்டாள்

நான் "கவிதை எழுதுகிறேனம்மா" என்றேன்.

மகளும் உடனே,
"எனக்கும் ஒரு பேனையும், பேப்பரும் தாங்கப்பா" என்றாள்.

நான் "எதற்கம்மா" என்றேன்.

என் மகளோ,
"உங்களுக்குத்தான் கவிதை எழுதத் தெரியுமா, எனக்கும் எழுதத் தெரியுமே" என்று,

சிறிது நேரத்தில் ஒரு படமும், இன்னோரு காகிதத்தில் எதையோ கிறுக்கினது போல் இருந்ததையும் தந்தாள்.

"இது என்னம்மா" என்று கேட்டேன்,

"இது அப்பாவும், அம்மாவும், நானும்... இதில் அப்பாவிற்கு நான் கவிதை எழுதிக் கொடுக்கிறேன்" என்றும்,

"இந்தக் கிறுக்கல் என்னம்மா" என்று கேட்க...

"இது அப்பாவுக்கு நான் எழுதிய கவிதை" என்று என்னிடம் தந்து என் மனதை நெகிழ வைத்து விட்டாள்.

ஒரு அப்பாவிற்கு இதை விட வேறு என்ன வேண்டும்..?

என் மகள் தரணிகாவின் "அப்பாவிற்கான கவிதையை" என்னைப் போன்ற அப்பாக்களும் படித்துப் பார்க்கவே இங்கே பதிவிடுகின்றேன்

- வல்வை அகலினியன்
          (20.10.2013)

0 comments:

Post a Comment