தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலைவர் பிரபாகரன் மயம்!!

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலைவர் பிரபாகரன் மயம்!!

“பிரபாகரன்” என்ற ஒற்றைச் சொல்லே தமிழகத்தில் புதிய சரித்திரத்தினைப் படைக்கப் போகின்றது!!

தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் உலகம் எங்கும் உள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் மற்றும் மக்களின் உணர்வுகள் தொடர்பில் ஈழம்ஈநியூஸ் தனது முகநூலில் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட மற்றும் வாசகர்களிடம் இருந்து உள்வாங்கிய கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றது.

தமிழகத்தின் ஏற்பட்டுள்ள மாற்றம் எமது விடுதலைப்போருக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக மாற்றம் பெற்று வருவதை இதனூடாக நாம் காணமுடிகின்றது.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலைவர் பிரபாகரன் மயம்!!

உள்ளம் பூரிப்படைகின்றது!
மெய் சிலிர்க்கின்றது!!
இனம் புரியாத பெரும் மகிழ்ச்சி!!!

தமிழ்நாட்டில் எந்தத் தலைவனுக்கும் இல்லாத மதிப்பும், மரியாதையும், பிறந்த நாள் கொண்டாட்டங்களும் எம் தேசியத் தலைவனுக்கே கிடைத்துள்ளது..!

இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பார்க்கும் போது, உலகத் தமிழினத்தின் ஒரே தலைவன் பிரபாகரன்தான் என்பதை ஆணித்தரமாகவும், உறுதியாகவும் நிரூபித்துள்ளது!!

தமிழக இளைஞர்களின் ஒவ்வொரு இதயங்களிலும் “பிரபாகரன்” என்ற பெயர் ஒன்று இருந்தாலே போதும் அவர்கள் வீறு கொண்டு எழுவார்கள்.!!

தமிழ்நாட்டில் “பிரபாகரன்” என்ற பெயர்தான் சாதியங்களையும், மதங்களையும் தொலைத்து புதியதொரு சகாப்தத்தையும், புதியதொரு தேசத்தையும் உருவாக்கப் போகிறது!!!

பிரபாகரன் பெயர் ஒரு சக்தி!
பிரபாகரன் பெயர் ஒரு தவம்!!
பிரபாகரன் பெயர் ஒரு வரம்!!!
பிரபாகரன் பெயர் ஒரு ஈரம்!!!!

இனிமேல் எந்த மாற்றான் தலைவனாலும் தடுக்க முடியாது!!

நீங்கள் நேரில் செய்யாததை, “பிரபாகரன்” என்ற ஒற்றைச் சொல்லே தமிழகத்தில் புதிய சரித்திரத்தினைப் படைக்கப் போகின்றது!!

- வல்வை அகலினியன்
             (27.11.2013)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:
1, www.eelamview.com
2, www.tamilwaiting.blogspot.com

0 comments:

Post a Comment